Home > ஏப்ரல் 2012

ஏப்ரல் 2012

திறமை!

செவ்வாய், 24 ஏப்ரல், 2012 Category : 0

திறமை!

நாம்காலத்தை கண்டு வியக்கும்முன்
காலம் நம்மைக் கண்டு வியக்கட்டும் !
திறமைக்காகும் அதுப்பயிர் மென்மேலும்
வளரப்பாராட்டு "அதுவாகும் உரம்"!

தத்துவம்!

கற்பனை கலந்தால்
மட்டுமே கவிதை
சிறக்கும்.!-உண்மை
இருந்தால் மட்டுமே
வாழ்க்கை மணக்கும்!

கவிதைத் தொகுப்புகள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2012 Category : 0

யோக்கியன்!

கொடுக்க இயலவில்லையே..-எண்ணி 
வாடி வருந்துபவன் -பெற்ற
பொருளை திருப்பிகேட்குமுன்
கொடுக்க நினைப்பான்.!

தேடல் .!

இறகுகளிழந்து சிறகுகளைத்தேடுகிறது
 "கிளி"!-மூடர்களின் குருட்டு நம்பிக்கை
கூண்டிலகப்பட்டு சுதந்தரத்தை தேடுகிறது!

புதுக்கவிதை!

திங்கள், 16 ஏப்ரல், 2012 Category : 0

வாசமின்றி பூர்த்ததால் ...
வாடும் பூக்கள் ! -தேடாத
தேனிகளால் கூடாகும் 
பூந்தோட்டம்!

 கவிதை நூல் !

உள்ளப்பூந்தோட்டத்தில் 
பூர்த்த பூக்கள் !
எண்ணத்திலாகும் பூச்செண்டு
சந்தையேட்டிலாகும் ... !

காணும் கண்களுக்கு 
கவர்ந்திழுத்திட்டால் ...
பூக்களுக்காகும் விற்பனை ! 

இலாபத்தில் பூக்காரன்
வியாபாரத்தில் பூந்தோட்டம் .!

உயந்தது நற்மனித நேயமே...!

Category : 0


உயந்தது நற்மனித நேயமே...!

சம்பிரதாயம் வேண்டாம்!
வீண் சஞ்சலங்கள் வேண்டாம்!
சமுத்துவம் பிறக்க ....
தேவை சகோதரத்துவம்.!

விவாதங்கள் வேண்டாம்!
வீண் வினையங்கள் வேண்டாம்!
நற்கருமங்கள் செய்திட.....
தேவையானது நல்லதோர் மனமே...!

உதவிட நினைப்போர்க்கு...
சிரம்பணிந்து வரவேற்போம்.!
வறுமைதனை அகற்றுவோர்க்கு...
கைகோர்த்து பலம் சேர்ப்போம்.!

அறியாமைகளை விரட்டு வோர்க்கு  
ஊக்கத்தை அளித்திடுவோம்...!
தீண்டாமையை கொளுத்துவோர்க்கு...
"தீ" யாக நாமிருப்போம்...!

மதம் மனிதனை வாழவைக்காது!
இறக்க குணமொன்றிருந்தால்...
விழுப்பம் மதத்தை ஆதரிக்காது...!
உயர்ந்தது நற்மனித நேயமே....!

கவிஞர் . முபாரக்.


தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!

Category : 0

சமீபத்தில் தோழர் யாகுப் அலி நோய்வாய் பட்டப்போது பிரார்த்தித்து எழுதியனுப்பிய வருத்தமடல் ''!



 உயிரை கொடுப்பவனும் அவனே
உயிர் பிய்ப்பவனும் அவனே !
கவலை மறந்திடு நண்பா
கடவுளை நினைத்திடு !

உன் கடமைகளை 
செய்திட மறவாதே
காண பல கண்கள் 
உள்ளதையும் மறவாதே !

உள்ளம் உயர்வாக 
நீ  நினைத்ததினால்...
இவ்வுலகம் நலம்பெற
 உன்னை பிரார்த்திக்கிறது!

தவறுகள் நடப்பது -இயல்பே ...!
மறப்பதும் மன்னிப்பதும் மரபே...!

கர்வம் கொண்டிருந்தால்...
உள்ளே "அது" அழிக்கும் !

எதையும் மறந்து...
 நீ நடந்தால் ...
உன் வளர்ச்சிக்கு
அது வழி வகுக்கும்!

நல் உள்ளம்
உன்னிடம் உள்ளதினால்
என்னுள்ளத்தில் உள்ளதை
கூறுகிறேன் ...!

பல்லாயிரம் வருடங்களுக்கு ...
மேலாக ,, உன் எழுத்துகள்
 நிலைத்திடவே  பார்க்கிறேன் ..
மனமுவந்தும் வேண்டுகிறேன்!

தமிழன்  பலகவிகள்
 நாம் படிக்க-விரைவில்,,,
உன் செவியில் 
அது ஒலிக்கும்  !

சிகிச்சை இன்றி 
குணமாக ...
அந்த மருத்துவரின்
மருந்து பலன் சிறக்கும் !


மருத்துவர் தந்த 
நாளை எண்ணி
வருந்தாதே நண்பா !
தன்னம்பிக்கையை 
ஒருபோதும்  இழுக்காதே ...!
வருத்தத்தில் இருக்கும்
 உன் குடும்பத்தை -உடனே 
இன்பத்தோடு இருக்க வழி வகுத்திடு  !
கடவுள் மீது பாரத்தைப்ப்போடு  
அவன் நிச்சயம்
நற் மனிதனை காப்பான்
கவலையை மறந்திடு!

நீ நலமுடன் வளமுடன்
வாழ ,,,உளமாற வாழ்த்தி
வேண்டிக் கொள்ளும்!

சகோதரர் - கவிஞர் இ.முபாரக்.  

மனிதனின் பழக்கமும் - வழக்கமும்-ஒழுக்கமும்!

Category : 0




விட்டுக்கொடுப்பது
மனிதத்தன்மை !-
முட்டிக்கொள்வது
மிருகத்தன்மை !

"தவறை என்னுபவன் !
தீங்கிழக்க மறுப்பான்..!
உணருவான்" உண்மை"
செய்வான் ....நன்மை"!

முந்திப்பது எளிது!
சிந்திப்பது கடினம்!
உடைந்தால் "கண்ணாடி"!
இணைந்தால் "முறியாநட்பு !

நன்மையை நாடுபவன்
உள்ளத்தால் வாடுபவன்
குணத்தால் நல்லவன்
குற்றம் புரிந்தவன் !

பொறாமைக்கொள்ளவும்
பொறுமை இழக்கவும்
சிந்திப்பான் ஒழுக்கமுடையான் !
 "பெருமையாய் "மதிக்கும் உலகு !

கோபம் கொள்பவன்
கொல்வான்  பொறுமை.!
இருந்த நட்பை இழந்து
வருந்தும் "பழக்கம்" .!

கவிதை தொகுப்பு

Category : 0


சங்கத்தமிழில் அங்கம்வகிக்க எதிர்நோக்கும் தமிழனின் ஓசை ..!

"ஒலிப் பெருக்கிக்கு என்மீதென்ன கோபமோ பேசத் "தயங்குகிறது " !
நாற்காளிக்கென்ன வருத்தமோ அரவணைக்க  மறுக்கிறது" !

"இதயச் சுவரில் வரைந்த சித்திரங்கள் "-கற்பனையோடு 
புதைந்திட்ட "பொக்கிஷங்கள் "சிந்தையில் "சுவடாய்" 'கனக்கிறது'' !

விழிமுன் பிரதிபலிக்கும் 
கவிதைகள்ஆறுதல் தரும் 
 பிறரின் மனதில் நீங்கா இடம் தேடியே ... "வருந்துகிறது "!

கேட்பது பொருள் ஆதாயம் "ஈட்டுவதற்கில்லை" ! -  இனிய 
தமிழோசையின்  "குரலோசையை  கேட்பதற்கு !

வரலாறு காணும் வளைகுடா தமிழ் அன்னையின் விதைகள் !

"தமிழன்னை"ஈன்றெடுத்த தொப்புள்கொடி உறவுகள் தமிழர்கள் !
அகிலமெங்கும் உயர்ந்தோங்கி நிற்கும் விழுதில் துளிர்த்த கிளைகள் !

மழலை ''மொழிநாவில் "சதிராடும் "குயிலின்குரலோசை "!
செவியில்கானமாய்...   ஒலித்திடும் அற்புதமொழி "தமிழ்பாசை " !

வள்ளுவன் -ஔவை உருவாக்கிட்ட வெண்பாக்களின் சந்ததி" !
இளங்கோ -கம்பரை இலக்கியஆய்வை பிறப்பித்த உயர்  ''நீதிபதி "!

"தமிழோசை "யின் சாதனைகள் தனித்து நின்றே வெல்லும் !
"தமிழ் "வரலாறு கண்ட சரித்திரங்கள் வளைகுடா சொல்லும் !


சில அரசியல்வாதிகள்

Category : 0


சில அரசியல்வாதிகள்


களவானிகள்
நாட்டை
கூருப்பொடும்
ஊழல்வாதிகள்!


வெண்சட்டைக்குள்
அழக்கு!
நிறைத்தே ...
சொலிப்பார் "!


உள்ளத்தில்
படிந்த
ஏராளக்
"கறைகள்  "!


புறம் "
போக்கர்களுக்கு
வாடிக்கை
"கூத்தாடுவது "!


வேடிக்கை
காண்பிப்பற்கு
வாக்குத்தவறும்
"நாக்குகள் !


ஏமாற்றுவோறுக்கு
ஏமாற்றம் பழக்கம்!
தயக்கமின்றி இயல்பாகும்
வழக்கம்!


மனைவி

புதன், 11 ஏப்ரல், 2012 Category : 0

மனைவி

கனவிலும் இருப்பால் ...!
"தாயாய் "தாங்குவால் 
சேயாய் "ஈன்ருவாள் "
"விழிகளாக இருப்பாள் "
"இமைகளாக துடிப்பாள் !
கண்ணீராக உருகி !
மெழுகாகவும் "கறைவாள்"

இன்பத்தில் "ஒருப்பாதி"
துன்பத்தில் மறு மீதி!

கட்டியமுதல் (இறக்கும்)
{கட்டையில் போகும்}வரை
அவள் கட்டிய "மனைவி"
நல் வழி காட்டுதலுக்கு
"நற் துணைவி ''!

திங்கள், 9 ஏப்ரல், 2012 Category : 0




நல்ல நட்பு!


"நட்பென்பது"
ஆகாய நிலவுப்போன்றதாகும்!
இருளை நீக்கும் ஒளி!-"அது"!
வாழ்கைக்காகும் வெளிச்சம்"!   

கவிதை தொகுப்பு

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012 Category : 0


அழகு!


சிறப்பு "மலருக்கு "
அழகு பிறப்பாகும்!
இல்லாவிடில் கொடியது
கொடியில் வாடும்
உதிரும் "இறப்பாகும்".!


ராக தேவதை எம்.எஸ். சுப்பு லட்சுமி !


மா..தவம் கண்ட 
மதுரை மாநகரம்!
உயர் கலை சிகரங்களில்
கண்டெத்த ''ஒலி"(குரல்)
சிகரம் ! - செதுக்கிய 
சிற்பியின் "உளி"!


கும்பகோணம் "தீ "விபத்து (நினவு நாள்)!


"தீ"க்கும்-
"குச்சிக்கும் "
மூண்டது 
மோதல் !


"இருவரும் "
உரசிக்கொண்டதால்
வெடித்தது "
"எரிப்போர்"!


பட்டாசுகலாய்
" வெடித்து  "
சிதரிய 
கூறைகள்!


பட்டாடைகளாய்
 "மின்மினித்த"
"பொன்"
வண்டுகள்!


பொசங்கின 
"நெருப்பு 
போரில்"!
காணுமிடமறியாமல் !


"கருகிய"
கூடும்-
கூடாகிய
பள்ளியும்!


மூளைக்கும் 
மொட்டுகளும்!
தொலைத்த 
"சிட்டுக்களும்"!


"நினைவு "
தழம்புகளோடு 
அனுசரிக்கும்
" தினம்"!


"ஆண்டாண்டாகும்"
வரலாற்று "சரித்திரத்தில் "
ஒரு நாளாகும்
கருப்புத்தினம்.!