கவிதையின் சிறப்பு !
என்றென்றும் மாறா குறையும்
மனம் நிறைந்த பொக்கிஷ
குவியலாய் ...இதயத்தில்
புதையலாகிருக்கும் நிறைந்த பெட்டகம்!
இளமைக்குள்ளும்,முதுமைக்குள்ளும்
ஈரெடுத்து எண்ணத்தில் செடிக் ,
கொடியாய்..!பீரிட்டு முளைக்கும் !
அழகு மொட்டாய் தோற்றமளிக்கும் !
மங்கையின் தலையிலே மெருகேறி
உள்ளத்தில் குடியேற இதயம்
பூக்க தரும் ஆனந்தம் கற்பனையில்
சிறகாக விரிக்கும் மலரின் இதம் !
காணும் கண்களுக்கு கவர்ந்திழுத்து
உணர்வுக் குவியலின் தீண்டுதல் !
பதுமையாய் தொட்டு தாலாட்டி
உறங்க வைத்து அழகு பார்ப்பது!
அதையேட்டிலே விடையாக சொல்
நடையாக புதிர் எழுத்துக்களாய்
உதிர்ந்த சொற்கள் மவுனமாய்
விழிகளுக்குள் பிரம்மிக்கும் பிரகாசம் !
தொகுப்பாய் தலைனிமிருகையில் சிறப்பாய்
நிலையாகும் வெண்பாக்கள் பண்பினை
விளக்கும் விளக்கம் அடைமொழியாய்...
எழுச்சி பொலிவுத்தரும் பதிவு !
படைப்பாளனுக்கு நெருங்கிய உறவாகி
சிந்தனையில் தவழ்ந்து ,நிமிர்ந்து
மழலை மொழியின் இனிமை !
எதகமொனையோடு அடங்கிய அடக்குமொழி !
வலிமையோடு இளமை மாறாத
புத்துணர்வு எழுத்தணிவகுப்பு
தந்திடும் வியப்பு கருத்தாகும்
வே{ர்}(றொ)ன்றுமில்லை இதனின்தனிச் சிறப்பு !