> > முகமூடி!

முகமூடி!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

முகமூடி!
பன்முகங்கொண்ட மனிதம் 
உருவங்களைப் புதைந்த மனிதன் 
ஒருவனாய் அகந்தை நிறைந்த
உள்ளம் மடமைத்தன பிழைகள் 
விழித்தால் சரியாகும் செயல்கள் !

சிந்தனையின் சாதனை எண்ணங்களின்
போதனை அறியாமைக்கு துணையாகும்
மனசாட்சி வேதனை உணரா நெறிவழியாகும்
அறவழித் துறந்து அறிவழி நடக்கவாகும்!

குருட்டு நம்பிக்கை இருட்டு வழி பயணம்
முடக்குப்பாதை அடைத்திடும் நெடுவழி
கிறுக்கனின் தள்ளிடும் உண்மைகள்
கசங்கிடும் எண்ணம் பொசுக்கிடும் திண்ணம் !

மதிப்பாய் வாழ்ந்த மதிப்பு குறையால்
அகப்படும் ஒருநாள் வசைப்படும்
விழிகளுக்குள் உள்ளே உறங்கியது
மிருகம் உருவங்கோண்டதால்
அவமானத்தால் விலகிடும் அகத்திரை
கிழிந்திடும் முகமூடி குற்றத்தோடு

Leave a Reply