கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!
Posted on வெள்ளி, 20 மே, 2011
|
No Comments
கவிஞர்.இ. முபாரக் பாடல்கள் ..!
என்னை காதலிக்க சொல்லவில்லை ...
காதலையும் சொல்லவில்லை ...
என்னை அறியாமல் காதல் பிறந்தது ...
கள்ளாமை உள்ளத்திலோர் கருவானது !
அவனை பார்கும் போதெல்லாம் ...
ஆனந்தத்தில் பாசை ஊமையாகிறது...
சொல்லத் தோன்றுகயில் ...
சொற்களும் அங்கே தடுமாறுகிறது !
{என்னை காதலிக்க}
அவனுடைய பேச்சை கேட்கையில் ..,
கேட்கும் பேச்சு யாவும் கீதமாகிறது ...!
அவனுடன் கழிக்கும் தருணங்கள் யாவும் ...
வாழ்க்கைக்கு புது வசந்தமாகிறது ..!
நொடிக்கும் நொடி ஒவ்வொன்றும்...
இப்போது யுகங்கள் ஆகிறது -
தனிமையில் வாடுவதால் ...
சுகங்களும் சுமையாகிறது..!
{என்னை காதலிக்க}
நாம் நடந்த பாதையை பார்க்கும் போதெல்லாம் - அது
கனவு தேசத்தில் கொண்டு சேர்க்கிறது ...
இரும்பாகிருந்த என்மனமும் - இப்போ
துரும்பாகி பழுதாகி நின்றது..!
தனிமையுடைய தவிப்புகளும்
எண்ணத்தின் பிரதிபலிப்பும் உணர்வாக வாடி உருக்குது !
நீ இன்றி பிரிந்து வாழ மட்டும் ...
இந்த உள்ளம் மறுக்கிறது !
{என்னை காதலிக்க}
போதும் , போதுமிந்த காதல்
கொடிய நோயாக தொத்திக்கொண்டது...!
எவ்விடத்தி சாய்ந்தாலும் இரணமாக
நினைவுகள் வலியாக வந்துப்பாயது ...!
தினம், தினம் நினைவில் வந்து - அவன்
சிறுக சிறுக என்னைக் கொள்வது ...~!
விட்டுவிட்டு துடிக்கும் என் இதையமும்
அவனை நினைத்தே ஏங்கி தவிக்குது ...!