> > கருச் சிதைப்பு !

கருச் சிதைப்பு !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


இன்பத்தின் மோகத்தால் 
பெருக்கெடுத்தது வி(வெ)ந்துநீர் 
சுகமிழுந்த கண்ணீராய் 
பாரத்தோடு சோகமாய் 
கதறுகிறது வயிறு ! 

சிசு உலகத்திற்கு
பாரமானதால் கொசுவாய்
கொன்றிடவே சிந்தனையில்
இரக்கமற்ற மனிதக் "கரு"

அறுத்து உமிழ்ந்திட்ட
மெச்சிலில் துயர்வோடு
வாழ்கிறது அனாதையாய்
தனித்து நிற்கும்
குப்பைத்தொட்டி!

Leave a Reply