நான் படும் பாடு !
சனி, 30 ஜூன், 2012 Category : கவிதை 0
கிட்ட தட்ட மணி
பத்தை எட்ட
வியாபாரம் முடித்து
கூட்டிட சொன்னது கணக்கு !
கூட்டியதில் சில
நேரம் அதிகரித்து
எழுத மறந்த விற்பனை !
பல நேரம் குறைந்து
காலத்தை வீணாக்கி
சிந்தித்திட ...!
இறுதியில்
முதலாயின் பையில்
சிறிது சில்லறை
சென்ற இடமறியாமல்
தவிக்கையில் முடிவாய்
முடிவாகிய கணக்கு !
நள்ளிரவில் முடித்து
ஓடோடி வர ....
வீதியோரம் ஓநாயை
அஞ்சி பதற்றத்தோடு
கடந்து விடுதியிலடைய ...
பூட்டிய அறை இருண்டு
மவுனம் காக்கும் !
சாப்பாடு சட்டிகளில்
மீதமிருந்தும்! ருசியாக
கிடைக்குமா எண்ணுகிறது
நாக்கு !
கட்டிலில் காத்திருக்கும்
கணினி வரவை
எதிர்நோக்கிட திறந்து
அமர்ந்து சிந்தனைகளை
பதிவு செய்ய காத்திருக்கும்
கண்கள் !
அறிவுக் கூட்டை
திறக்க நினைக்கும்
சாவியான பதிவுகள்
சில நேரம் என்னின்
சிந்தனைப் பூட்டியே
உடைக்கும் உறக்கம் !
நான் என்னிடம்
சொல்லாமல் உறங்கியும்
அதுவாக விழிக்கும்
உணர்வு வேகமாய்
ஓடும் கடிகாரம்
செய்யும் பணியை குறிக்கும் !
அவசர அவசரமாய்
குளியலறை நுழைந்து
தேனீருடன் முடித்து
கெளம்பும்முன் ஒலிக்கும்
கைப்பேசி விரைந்து
அழைக்கும் வாடிக்கையாளர் !
கண் எரிச்சலோடு
சென்று சிறிது
ஓய்வெடுக்க நினைத்தால்
சுத்தம் செய்யக்
காத்துக்கொண்டிருக்கும்
வியாபாரஸ்தலம்
குப்பைக்கூளமாய் !
மெருகேற்றி அலங்கரித்து
சுத்தமாக்கினாலும் அழக்காக்கும்
காலணிகள் !வராதே
சொன்னாலும் வீணாகும்
வியாபாரம் !
நல்ல விற்பனை செய்ய
நினைத்து ஓடோடி
வாங்கி வித்து விட்ட
பெருமூச்சு !பேச்சாக்கி
வாங்கிப்பெற்ற சந்தோசம் !
சிந்தனைகள் விழுதுகளாய்
எழ ...தொடுத்த எழுதுகோளின்
போராட்டம் !மாராட்டமாய்
அவ்வப்போது தடுத்து
நிறுத்தும் வீண்தண்டவாட்டம்
வாடிக்கையாளர்கள் !
தேரோட்டமாய் இழுத்து
பிடித்து சிதறிய
எழுத்துக்களை தேக்கி
எழுது முடித்து
பதரப்படியே கூறிட ...!
பிறர் முகம் சுழிக்க
கேலி செய்தாலும்
வெளியாகாத கற்பனை
படைப்புகளாய் உதிர
வைத்து அழகுப்பார்த்து
ரசிக்கும் ரசனை !
பிறருக்கென
உரியதாக்குகையில்
அளவுக்கடந்த சந்தோசம்
எல்லை மீறி செல்கிறது
ஆனந்தத்தில் !
முதலாளி திடீர் நுழைய
எழுதிய எழுத்துக்கள்
கலவானித்தனமாய் மறைத்து
நினைத்தப்பாதி காற்றில்விட
மீதி காகிதத்தில் முடிவின்றி
மறந்த தொடர் !
நேரம் தவறாது
பேசும் மனைவி
பிரிவினை மறக்க
ஆறுதல் தரும்
குழைந்தைகள் !பாசம்
பொழியும் பெற்றோர்கள் !
வாசத்தால் வறுமை
இருந்தும் துறந்த
கடினங்கள் !வருந்தாமல்
ஊக்கமளிக்கும் நட்பு !
படித்து விமர்சனம் கூறும்
வாசகப்பட்டாலம் !
சுட்டெரிக்கும் வெயிலில்
உருகிட வைக்கும் குளிரில்
நாடிவந்து -ஓடிவந்து
ஓய்வின்றி மயக்கமாய்
குட்டி உறக்கம் !
சமைக்க வேண்டும்
நினைத்து எழுப்புகையில்
மூட்டையாய் கடக்கும்
அழைக்கு மூட்டைத்துணி
துவைக்க அழைக்கும் !
முடியாமல் சலவை
செய்துப்போட்ட
சட்டை மின்மினுக்கும்
அன்று மட்டும்
அலுப்போடு !
மாதம் கடந்தால்
சம்பளம் வாங்கும் முன்
வீட்டு வாடகை பாக்கி !
தவறாது கட்டினால்
மட்டுமே மின்சாரம் !
உரிய நேரத்தில்
காசோலை வங்கியில்
விழாவிட்டால்
கோபப்படும் சம்சாரம் !
இப்படியே உருண்டோடும்
என் பணி !சிலத்தருணம்
என்னை சுற்றி
பூமி சுற்றுவதில்லாமல்
அதைச் சுற்றி நான்
ஓடுவதாகவே தெரிகிறது !
ஏதுவாகிருந்தாலும்
சலிக்காமல் ,மலைக்காமல்
தன்னம்பிக்கையோடு
உருண்டோடும் வாழ்க்கை
பூமி நிற்கும் ஒருநாள் !-
என் மூச்சு பிரியம்போது !
அதுவரை ஓயாது
ஓடிக்கொண்டிருக்கும்
தொடரும் செயல் !
நோயின்றி ,தொய்வின்றி
இருந்தால் வளமாகும்
வாழ்க்கை இலக்கை
நோக்கி செய்யும்
பயணம் வெற்றிப்பெறும் !
பஞ்சத்தை தாங்கிப்பிடித்து
வறுமை போக்கிட்டால்
என் வாழ்க்கைக்காகும்
வசந்தம் துயரத்திர்காகும்
மறுமலர்ச்சி !