Home > ஆகஸ்ட் 2012

ஆகஸ்ட் 2012

நட்பு !

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012 Category : 0



முகமறியாத ஏடும் 
முதன்முறையாக 
எழுதுகோலும் .
அறிமுகமாகிறது .!-

விரல் நுனியில் நட்பாக !
வெள்ளை காகிதத்தில்
வியப்பாகும் கவிதை
எழுத்துக்களாகும் உறவு !

தேடல்

Category : 0


இருவரும் பழகி
இதயத்தில் எழுதிய
காதல் வரிகள் !-பிரிவால்
கண்ணீரோடு
கறைந்துவிட்டதுவாம் ...!

நினைவுகளோடு
தேடுகிறது உணர்வுகள்
வருத்தத்தோடு உதிர்கிறது
எழுத்துக்கள் தேடலோடு !

தொகுப்பு !

Category : 0

உயிரும் ,உயிரும் 
ஒன்றிணைந்து உயிராக 
உறவாடுகையில் இன்பத்தால் 
ஒன்றிணைகையில் மெய்யாக ...
உருவாகும் "உரு "
உள்ளத்திலிருந்து இடமாறி
கர்ப்ப பையில்.....

"கரு"வாகும் எழுத்து
நிலையாகும் பொருள் "கரு"த்து !
முழுமையடைகிறப்போது
தாய்மையாய் முகவரித் தரும்
இலக்கணத் தொகுப்பு !

ஏமாற்றம் !

Category : 0



பதியாத பதிவைத் தேடி 
விழிகள் ஏங்குகிறது !
வராத சிந்தனையைத் 
தேடி கவிதை அலைகிறது !

விலை மாது ,,,!

Category : 0


பெண்கள் மலிவு
சந்தையில் மானத்தை
கூவி விற்கும் வியாபாரம்
அற்ப காசுக்காக சொற்ப
விலையில் சுகம் கொடுக்கும் !

ஆடைகள் இறக்கி
கண்காட்சியில் வைத்தால்
மோகம் கொள்ளும் பலர்
தேகத்தோடு தொட்டுபார்ப்பர் !

அவலப்பசியை போக்க
உடல் கசிய வரும் வியர்வை
சலிக்காத உறவு வரவையே ..
எதிர்பார்க்கும் வறுமையை போக்கும் !

உடல் சல்லடையாக்கும் காசுகள்
மாசடைய வைத்தாலும் கவலையில்லை !
பிறர் இருப்போடு வருபவரை மறுப்பும்
தெரிவிக்காமலளிக்கும் சிற்றின்பம் !

சுகமான பயணம் மேற்கொள்ள சுமையும்
தாங்கிடுவாள் கனத்த ஏக்கத்தோடு பேரின்பம் !
துயர்வை துடைக்கும் அழகு அழக்கு
மூட்டையாய் பொதி சுமக்கம் துன்பம் !

இருக்கும் வரை பிழைப்பு சீராகும்
நாராகும் உடல் சாறாகும் வரை பிழிந்து
உடலையும் தந்திடுவாள் ரணத்தும்
தாங்கிடுவாள் மறைத்து எழுந்திடுவாள்
சலிக்காத விலை மாது ,,,!

கனவுப்பயணம் -

Category : 0



தனிமையில் தவிக்கும் அநாதை சிறுவன் !
தனிமையில் நின்று
வாஞ்சையுள்ளம் 
பஞ்சாகி சிதைந்து
தேம்பி ,தேம்பி
அழுதது அம்மாயென்று !-
அவளழைத்தும்
வரவில்லை வந்தது
வலிகள் !-தந்தது பிரிவு !

ஏக்கத்தோடு நிற்கின்ற
பிஞ்சைப்பார்த்து நஞ்சுள்ளம்
கொண்டவர்கள் கண்டு களித்தே
வீதியில் செல்கிறார்கள் !

அழக்கு படிந்த கறையுடை
ஆடை உடித்திருப்பதை கண்டு
விழிகள் ஒதுக்கு புறமாய்
ஒதுக்கியே செல்கிறது
கலங்கத்தொடு சிறுவன் ...
முகவரித்தேடி அலைகிறது !

ஊமையாய் உதடுகள்
சிந்தனையில் உணர்வுகள்
ஆறுதல் கூறி ...தூக்கி
உள்ளத்தோடு உள்ளம் !

கட்டித்தழுவையிலே ...
அழவில்லை என் விழி !-
சிந்தாதக் கண்ணீர்
இதயம் கசிந்து கற்பனை
வடிக்கிறது !-

அனாதையாய்
தவிக்கும் சிறுவனைக்
கண்டு உருகிய உள்மனம்
அலர்ந்து விழித்துப்பார்க்கையில்
அது கனவென்று !-நினைவாக
வந்துதிர்ந்த கவிதைகள் !

உண்மைகள் !

Category : 0



கவிதையென்றாலே ...
பொய் ,பிதற்றல் சொல்லும்
நாவுக்கு என்னத்தெரியும் !?-
அதில் புதைந்திருக்கும்
உண்மைகள் !-உணர்வுகள்
வருந்துகிறப்போது
சிந்தனைகள் வருந்தி
துளியாய் சிந்தும்
சிறுத் துளி கண்ணீர்
கவிதையாகிறதென்று!

கவிதைகள் !

Category : 0

மனக் கல்வெட்டில் 
உணர்வால் எழும்பியது  
எண்ணங்களின் அற்பம் !
சிந்தனை சிற்பம் 
செதுக்கியதால் 
உருவானது எழுத்துகள்
அழகிய சிலைகளாய்
உரு
வெடுத்தக் கவிதைகள் !

வேடம்

Category : 0

அழக்கு படிந்துள்ளம் அழகாய் 
வெளித்தோற்றமளிக்கும் பழக்கம் 
வழக்கமாய் பிடிப்பாகிருந்த 
நட்பையும் வெடிக்க வைத்திடும் நடிப்பு 

துடிப்பான செயல் துயர்வை
தந்திடும் வருத்தம் இழந்திட்டப்பின்
உணர்வான் தான் செய்தது தவறு
படிப்பினையாகும் பாடம்
ஒழுக்கத்தை கற்பிக்கும்
கூடிய உறவு !-கூடாதப்போது
திருத்தம் செய்யும் பிரிவு !

வாழ்க்கை நூல் !

Category : 0

வாழ்க்கை நூல் !

கடந்தவை காலச்சுவடுகளாகும் 
நடக்க உள்ளவை வரைவுகளாகும் !
வரலாறுகும் பதிவுகள் !
வாழ்க்கை குறிப்பாகும் புத்தகம்,

திருநங்கை !

Category : 0


ஆணும் -பெண்ணும் 
உறவினிலே வேறுபடாமல்
ஒன்றுப்பட்டு வேறெடுத்த
ஓரினமே ...பாலினம்!
=======================

  • திருநங்கை !
உருவத்தையும் ,நடத்தையும்
குணத்தையும் மனத்தையும்
சொல்லையும் ,செயலையும்
ஒப்பாக்கி ..உண்மையாய்
ஒன்றிணைத்து தப்பாக
வரைந்திட்ட ஓவியனின் ஓவியம் .
தாய் -தந்தை-யின்றி  ஒற்றையாய்   ஒப்பற்று 
கலப்படமாய் விந்தையிலே
ஒன்றிணைத்து இயற்கையின்
காவியப்படைப்பில் நாவுத்தூற்றிட
வித்திட்ட படைப்பாகி ,,,,
இனமாகி,பூமிக்கு கனமாகி ,,,
வந்துதிர்த்ததோர்  ஊனப்பிறவியே ,,,!

(மது} {காதல் }

Category : 0

கண் விழியில் மதுப்புட்டி 
உள்ளத்தை தொட்டிட்டால் 
நாவூறும் சுவைத்திட நினைத்திடும் 
பெருந் தொட்டியில் குளித்திடவே !

உதடுகள் விரும்பிடும் சுவைத்திடும்
அருந்தையிலே மெய்மறந்திடும்
உலகம் !போதையேறி தடுமாறி
வீழ்த்திடும் காட்சிகள் யாவும்
அதுவாகுவே நிற்கும் !

விழிக்கயிலே உணர்ந்திடும்
குடிப்பழக்கம் குடியை கெடுக்கும்
வாழ்க்கை !-ஏளனம் செய்யும்
விழிகளுக்கு பல்லிளிக்க வாடிக்கையாகும் !
போதையேறிய(மது}காதல் !

சிறந்த நங்கை !

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012 Category : 0

அழகானவள் எல்லாம்
காதலியாக முடியாது
விரும்புகிறவர்கள் எல்லாம்
மனைவியாக்க முடியாது !