தனிமையில் தவிக்கும் அநாதை சிறுவன் !தனிமையில் நின்றுவாஞ்சையுள்ளம்
பஞ்சாகி சிதைந்து
தேம்பி ,தேம்பி
அழுதது அம்மாயென்று !-
அவளழைத்தும்
வரவில்லை வந்தது
வலிகள் !-தந்தது பிரிவு !
ஏக்கத்தோடு நிற்கின்ற
பிஞ்சைப்பார்த்து நஞ்சுள்ளம்
கொண்டவர்கள் கண்டு களித்தே
வீதியில் செல்கிறார்கள் !
அழக்கு படிந்த கறையுடை
ஆடை உடித்திருப்பதை கண்டு
விழிகள் ஒதுக்கு புறமாய்
ஒதுக்கியே செல்கிறது
கலங்கத்தொடு சிறுவன் ...
முகவரித்தேடி அலைகிறது !
ஊமையாய் உதடுகள்
சிந்தனையில் உணர்வுகள்
ஆறுதல் கூறி ...தூக்கி
உள்ளத்தோடு உள்ளம் !
கட்டித்தழுவையிலே ...
அழவில்லை என் விழி !-
சிந்தாதக் கண்ணீர்
இதயம் கசிந்து கற்பனை
வடிக்கிறது !-
அனாதையாய்
தவிக்கும் சிறுவனைக்
கண்டு உருகிய உள்மனம்
அலர்ந்து விழித்துப்பார்க்கையில்
அது கனவென்று !-நினைவாக
வந்துதிர்ந்த கவிதைகள் !