Home > அக்டோபர் 2012

அக்டோபர் 2012

சாதி கொடுமை

புதன், 10 அக்டோபர், 2012 Category : 0


  • மனித நேயத்தை  
பொசுக்கி
        கொடுமை
சா தீ யை 
          எரித்து 
தீண்டிய தீ 
  • எரித்த சாதி 
காதலர்கள் 
            சக்தியில் 
சாத்தியமானது 
             சத்திய 
சாதனை 
  • நீதி இழந்தும் 
வாழ்கிறது 
             வரலாறு 
காதல் 
                 சோதி !



""அகிம்சை ""!

திங்கள், 8 அக்டோபர், 2012 Category : 0



காந்திய தேசமென்று மேவிட 
உரைத்து சம நீதி சமயம் 
கற்பித்து மனிதன் கூடி வாழ்ந்திட 
 பல போதனைகள் வழங்கிய 
தேச பக்தனின் கடை வழி !

நடையில் அகிம்சையை உண்டு 
அழிக்கும் ஆயுதங்களை மெண்டு  
உயிர் வாழ கூர்மை புத்தியுற ஞானத்தை 
தெளித்து யுக்தியை கண்டிட வகுத்த வழி !

தீ-விரவாதம் கூடாதென நூதன 
போராட்டம் சாதாரணமான சாதனமற்ற 
சாத்திய அமைதி சாதனைக்கு அறிவிழி 
நாகரீகம் உரியது வாழ்வியலுக்கு ஒழுக்கம்!

 வழிமுறைகளை நெறியது உயரிது 
தேசப்பற்று மதித்தால் ஒற்றுமையை
கற்று கற்பித்து வந்திட்டால் உலகில் 
சாந்தியும் சமாதானமும் நிலவும் விழியில் !


மலர் !

ஞாயிறு, 7 அக்டோபர், 2012 Category : 0


ஒரு நாள் 
இன்பத்திற்காய் 
சுகமேற்கும் ...

கூந்தலேறிய 
புன்னகைத்து....
 இளமையோடு 
வாடும் !

ஈர்க்கும் 
வாசத்தை இழந்து 
ஆயுளை 
உதிர்க்கும்
அழகு மலர்  !

கைப்பேசி !

Category : 0


தொடர்பை விரைந்தே 
அளிக்கிறது தகவல் 
இணைப்பால் தவறிடும் 
இளமைக்கு வழி வகுத்திடும் !

கெடுக்கும் ஆபாச ,
புகைப்படங்களோடு
நிறைந்த அறிய சாதனம் ...
சாதனையாகும் விஞ்ஞான 
முன்னேற்றம் சோதனையாகும் 
கைப்பேசி மனிதனுக்கு 
வேதனையாகும்  !

"தீ"க்குச்சி !

Category : 0




நெருப்பு பற்றிக்
கொள்ளுகையில் 
அதில் தாநெரிந்து 
தாகத்தை 
மீட்கும்  வரை 
உணர்வுக்குள்  தணியாது 
தன்னை தானே 
தேகத்தோடு 
எரித்திடும் 
உரசுகையில் 
பொசுங்கிடும் 
மோக "தீ"க்குச்சி !

அன்புக்கணவாய் -நினைவோடு எப்போது வருவாய் !

Category : 0


ஒவ்வொரு நிமிடமும் 
வருடங்களாகின நெருடல்கள் 
இருளோடு சூழ்ந்தன ......
கைப்பிடிக்கையில் 
இன்பமாகத்தானிருந்தன ......!

துன்பமின்றி இருந்த 
நாட்கள் சுகமோடுத்தான் 
கடந்தன பிரிவில்
வருத்தத்தோடு கழிந்தன!

கைப்பேசி பேச்சு ஆறுதலளித்திடும்   
சில நொடிகள் ஏக்கங்கள்
தணித்திடும் நினைவுக்குள் 
உதிர்த்திடும் கனத்திடும்
 உணர்வுகள் தனிமையில் 
வருந்திடும் அணு அணுவாய் 
யுகத்தோடு கொன்றிடும் !

கனவோடு வாழ்க்கை பகல்
 கனவாகி நின்றிடும் !
கற்பனையோடுத்தான் காலத்தை 
வீணாக்கி கழித்திடும் கற்பனையோடு 
இன்புறும் நாட்கள் !-இல்லாமளாகிடும் 

கணவா.... நீயில்லாது பூக்களுக்கு  
வாசமேது மலர்ந்திடும் வாடிடும் 
இளமை மோகம் உன் வரவை 
எதிர் நோக்கியே  கடந்திடும் 
இல்வாழ்க்கை சிறப்பாக 
எப்போதுதான் அமைந்திடும்  ?


விசுவாசம் !

Category : 0


நிமிடங்கள் போதும் 
எனக்கு உள்ளத்தை 
அறிந்துக்கொள்ள 
தோழியே ......
பழக்கத்தில் அறியும் 
உன்னதம் உணரும்
 அறிஞன் நான் 
படிக்காத 
 பாமரக் கவிஞன் நான் 
அன்பில் இலகிடுவேன் 
பாசத்தில் இறைத்திடும் 
என்னுள்ளம் 
விசுவாசத்துடன் இருந்திடும் !

சகோதரியின் பாசத்தின் வெளிபாடு !

Category : 0


காணாத நிறை 

உன்னில் காண்கிறேன் .......
தோழியே !{சகோதரியே }!

உன் பாசத்தில் 
அம்மா இல்லாத 
தேசத்தில் 
குறைகளின்றி நிறைகளாய் !

நீ ஊட்டும் அன்பில் 
தெகட்டாத 
அரவணைப்பில் எல்லாமே 
தாயாக மாறி நீயாக 
அவளாகவே இருப்பது 
மிகையே !

என் சந்தோசத்தில்
நீ தழைக்கும் நிமிடங்கள் 
யாவும் நினைவில் 
உள்ளத்தில் எப்போதும் 
என்னின் உன்னத உறவு
இருக்கும்!

உன்னைவிட்டு 
பிரிந்தாலும் நிமிடங்கள் 
யாவும் உன்னினைவில்தான் 
இமைக்கும் !
கழிகின்றன உயிர் 
உள்ளவரை 
நினைவுக் கூறும் 
மனசாட்சி ! 

பால்வினை நோய் !

Category : 0

கொள்ளா  ஊடல் 
கொள்ளுகையில் 
வறண்ட 
கற்ப வயலுக்கு 
நீர்  
பாசனை   ஈரத்தால்
 நனையும் 
மோகத்தில் வளரும் 
பயிர் 
குற்றமாகும் தீண்டத் 
தகாததாய் 
செழித்து முளைகிறது 
பூமி !
விளைச்சலால் அண்டிட்ட
 பூச்சி
உயிர் கொல்லி 
நோயோடு 
வாழ்கிறது வாழ்க்கை !

வேசி !

Category : 0

மோக வசியத்தோடு அலைந்திடுவாள்
வேசி  விழியால் வலைவிரிப்பாள்
வீழ்த்திடும் கட்டுடல்  வறுமை
மீட்டெடுக்கும் சிக்கியவனுக்கோ ....

 உணர்வால் போதையேற்றிடும்
இன்ப மதுபானம் தணித்திடும்
கற்கண்டு ரசனை புசுத்திட்டால்
ருசித்திடும் அருந்தையில் பந்தியில் !

அளவற்று உட்கொள்ளுகையில் விருந்து
அமிர்தமும் நஞ்சாகும் மருந்து
பஞ்சமகற்றும் ஊடல் கூடாகும்
மூட்டிய தேகம் மீட்கும் விருந்தாளிகளுக்கு

வயிறார உண்டு பேதளித்து சென்றிட
வாழ்த்தி வரவேற்கும் மீண்டும்
தடுமாற்றமளிக்கும் கொண்டிட்ட
உறவில் நிறைவாய் நோயாளியாக்கும்
அவலப் பசி விரைந்தே கல்லறை
சேர்க்கும் பால்வினை நோயோடு!

பத்தினி !

சனி, 6 அக்டோபர், 2012 Category : 0


உரியவனுக்காய் வாழ்ந்து  
அவனாலே தழைத்து
அவனுக்காய்  வீற்றிருந்து  
அவன் அன்பில் இளகி 
பரவசத்தையடைந்திடுவாள் 
இன்பமொன்றே கண்டிடுவாள் 
உயிருள்ளவரை கணவனே 
துணையென்று புகழ்ந்திடுவாள் 
சொல்லுக்குள் அடங்கிடுவாள் 
மங்கை அவளே பத்தினி !

{ஏய்ட்ஸ்}பால்வினை நோய் !

Category : 0

ஈக்கள் மெச்சிலிட்டு 
மொய்த்து விட்டதை 
அருந்திட்டால் கிருமிகள் 
பரவும் தொற்று நோய் 
வித்திடும் புதையிலே
 தள்ளிடும் மாதுக் கடை 
வசிப்பிடம் பரவும் கிருமிகளின்
இருப்பிடமாகும் பிறப்பிடம் !

தேள் !

Category : 0

விஷம் துடுப்பிளிருக்கும் 
வேசம் நடிப்பிளிருக்கும் 
நடையில் மவுனத்தை 
காக்கும் நாவு ஊமை 
உவமை தந்திரமாய் 
கொட்டியே விரைந்திடும் 
எரிச்சலூட்டியே 
மறைந்திடும் அஞ்சி 
விதைத்திடும் குணத்தில் நஞ்சு !

அறுவறுக்கத்தக்க தண்ணீர் !

Category : 0

குட்டையிளிருக்கும் 
"நீர் "விரும்பும் 
பருக அறுவறுக்கத்தக்கதாகும் 
தாகத்திற்கு 
ஆற்றுத் தண்ணீர் !
மெச்சிலாகும் அருந்திட ....
சேற்றில் மேயும் 
மாடு! 




முத்தம் !

வியாழன், 4 அக்டோபர், 2012 Category : 0

ஆசை 
நெருபில் மோகம் 
சிக்கியது ..

இதழ்கள் உரசியது 
சப்தமின்றி 
மவுனத்தில் பேசும்
முத்தம் .

பரவசத்தில்
விழிகள் மலர்ந்தது
இன்பத்தில்
மறந்த கற்பு !

ஆசை வேரில்
துளிர்ந்த
மொட்டு சுவாசக்காற்று
பட்டு !

மூச்சு
முட்டியது உணர்வில்
தீ பற்றியது
காதல் ஏக்கத்தில்
உள்ளம் !

காதல் .!

0


நீ வாசிக்கவே 
கவிதைகளை பிரசிவிக்கிறேன்
உன்விழியில் 
கற்பமுற்று ஆசையில்
குழந்தையாக 
பெற்றெடுக்கிறேன் தாயாக !
கண்டும் காணாது 
ரசித்தே 
திரும்புகிறாய் விரும்பாததுப்போல !
வருத்தத்தோடு
வாடி வதைத்திடும்
காதல் .!

அம்மா !{இவளும் தாய்}!

Category : 0

சுகத்திற்கு சுயமிழந்து 
மோகத்தில் தடுமாறி 
வழுக்கி விழுந்தாலும் 
கனத்த சுமையிலும் 
கலங்கியே சுமந்திடுவாள் 
களங்கத்தோடு  வாழ்ந்திடுவாள்
அவலப் பட்டத்தோடு ...!

உலகம் வெறுத்தாலும் 
அமைதியை காத்திடுவாள் 
வருத்தங்கள் கொன்றாலும் 
உயிரோடு அமைதி பிள்ளை 
பெற்றெடுக்கும் வரையில் 
துன்பத்தில் நீந்திடுவாள் 
கரையேற்றி மகிழ்ந்திடுவாள் 
இறுதிவரை ....!- உயிர் இறப்பின் 
இருள் மறையும் இழிவுச் சொல் 
உயர்ந்தே விழையும் சாதனைகளோடு 
முடியும் வாழ்க்கை தொடரும் !



நெறி!

Category : 0

நெறி!

கசக்கும் 
உண்மை எதிர்க்கும்
"தீமை " 
நாவு 
தடுத்தாலும் சொல்லிவிடுவதே 
சிறந்தது !

உண்மை 
உண்டாக்கும் பகைமை 
நட்பு 
இழந்தும் நேர்மை 
மொழிந்தால் 
வெல்லும் மனித நேயம் !

தீபாவளி !

Category : 0


வானவில்லின்
எழில் தோற்றம் பூமியில் !

இடி ,மின்னல்
மேகம்
மின் மினுக்கும்
நட்சத்திரம் !

இருளகற்றும்
ஓளி 
நம்பிக்கையில்  
பிரகாசிக்கும் தீபம் !

சமயம் மறக்கும் 
கொண்டாட்டம் மகிழ்வு 
பொன்வண்டுகளுக்கு!

தீண்டாட்டம் 
ஆடைகளுக்கு வறுமை 
வறியவர்களுக்கு
 பெருமை !

ஒற்றுமைக்கான
 கலாச்சாரம் 
சுபத் தினமாகும் 
அலங்காரம் தீபாவளி 
ஒருருநாள் 
தமிழர்களின் 
உயரிய பெருநாள் !

ஏக்கம் .

Category : 0

ஜன்னலுக்கு 
வந்தது ஏக்கம் 
நிலவின் 
மீது மோகம் ,,,,,,,,,
தென்றலுரசிய
 தாக்கம் .......
மூடியத்திரை விலகிய 
வேகம் ,,,,,
காதல் காத்திருக்கும் 
யாகம் !

ஏக்கம் .

புதன், 3 அக்டோபர், 2012 Category : 0



ஜன்னல் மீது
நிலவுக்கு காதல்....
திறந்த விழிகளோடு
கதவுகளில்
உற்றே நோக்குகிறது
கதவுகள் ....!
விடிந்தும் பகலை
மறந்த இரவு!


அலங்காரம் !

Category : 0

குயில்களின் அணிவகுப்பு 
பிரமிப்பூட்டும் ஆடைகள் 
ஜவுளிகளின் எழில் 
ரகங்களை ஈர்த்திடும் !

கண்ணை கவரும்
அலங்காரம் வண்ணங்களை
விழிகளுக்காகும் ஆனந்தம்
மனதிற்கு மிகுந்தசந்தோசம் !

கவர்ந்திழுத்திட்ட அழகு
விரும்பிட்டப்பொழுது
நிரம்பிடா ஆசை
குறையோடு இறையாகும்!

உள்மனதில் விரையாகும்
பிறையாகும் .மோகம் ..
காதல் சிறையாகும்
மனது குறையாகும்
வருத்தத்துடன் பிரிவு !

அழகு

Category : 0

பிடிக்கவில்லை சொல்ல முடியாது .....
அறவே பிடிக்காதும் சொல்ல இயலாது 
ஈர்ப்பில் கவனத்தை திசைத் திருப்பிட்ட 
மகிழ்ச்சித்தான் மயக்கி பாசபிடியை 
கவர்ந்து இழத்து உள்ளத்தில் முடிச்சியிட்டது !

ரெட்டை ரோஜாவின் மொட்டுப்பார்வை 
மனதை முட்ட வைத்து கட்டி ஈர்த்தது 
பட்டிட வைத்தது சுட்டி சிரிப்பு,,,
காணுகையில் கண்கள் வசீகர மிழந்து 
உதிர்த்திட வைத்ததுதான் சொல்ல முடியும் !

உண்மை ......கண்ட அழகில் வியந்த 
ஏக்கம் குட்டிகளின் வித்தை 
குளிர்ந்திடும் 


இயற்கையின் படைப்பு வியக்க
வித்திட்ட அழகு 
வியப்பு அழகின் சிறப்பு !

பிறந்த நாள் .

Category : 0

விரட்டிக்கொண்டுதான் 
இருக்கிறேன் ....
நெருங்கிக்கொண்டுதான் 
இருக்கிறது 
பிடித்திடுவேன் ஒருநாள் ................
அகப்பட்டிடும் 
இலக்கு அன்றே ,,,,,,,,
வறுமைக்கு 
வசந்தமாகும் ஏழ்மைக்கு 
விடியல்காணும்
 பிறந்த நாள் .

தடுமாறும் மொழி தமிழ் !

Category : 0

தொலையும் தமிழை 
பிடித்து காப்பாற்றிட 
நாவு மறந்துவிட்டது 
தடுமாறும் தமிழ் !

கவலைப்படுகிறது தமிழன்
எழுதிட மறந்த மொழி !
கொண்ட வழி அறியாது
இழந்திடுமோ,கழிந்திடுமோ
விழி வருந்துகிறது !

உயர்ந்தது

Category : 0

என்னை விட .....
என்னை விரும்புவர்களை விட ...
எனக்கு விருப்பமானவர்களே 
அழகானவர்கள் பிரியமானவர்கள் !

விருப்பத்திற்கேற்பவாகும்
அழகு ....கண்டாலே ..
கொள்ளை கொள்ளும்
எழுந்து துள்ளச்சொல்லும்
மேன்மைஉள்ளம் . !

அரவணைத்து அன்போடு
மடியேந்திடும் தன்னலமற்ற
நேசம் !- பாசம் நொடியில் பிறந்து
கொஞ்சும் மிஞ்சிய விசுவாசமே
சிறுசுகளுக்கு சிறந்தது !-அதுவே
உலகத்தைவிட உயர்ந்தது.

தேடல் !

Category : 0


கனவைக் கண்டேன் 
விடிந்துப்போனது 
இரவு !
கற்பனையில் மிதந்தேன் 
இ(சு )ருண்டுப்போனது
 பகல் !

எதிர்நோக்கும்


 விடியலையும் தொலைத்திட்ட 


உறக்கத்தையும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
வாழ்க்கை 


நிம்மதிக்காகும் நாட்கள் !

கவிதை

Category : 0

மங்கையின்  மீது 
மோகத்தால்
 ஆசை பிறந்தது 
ஆர்வத்தில்
 கிறுக்கினேன் கவிதை 
உதிர்ந்தது 
வேகத்தில் காதல்
விவேகமானது 
வழுக்கி விழுகையில் ....

காதலி 


தொத்து 
நோயானது 
பிரிவு 

கழுட்டிவிட்டு 


போனதால் 


மாட்டிகொண்டது
கவிதை 


பொய்த்துப் போன 

உயிராய் 
கனவுகளில் "'மெய்க்கவானது 

ஏட்டில் 


ஊய்த்த எழுத்துக்கள் !

படைப்பு !

Category : 0


ஓடத்தை தவிர்த்திட்டேன் 
இறங்குவது குட்டையென்று 
துணிந்தே தழைத்திட்டேன் 
குறுகிய வட்டமென்று !

இறங்கியப் பிறகுதான்
உணர்ந்தேன்....................
நீந்துவது பெருங்கடலென்று !

அதில் மிதக்கும்
சிற்றட்டையானாலும்
ஊறியே கரையொதுங்கும்
சுரக்கும் நீராகும் தேன் !
படைப்பிலாகும் அமிர்தம் !

பெண் சிசு

Category : 0

குழந்தை சிரித்திட 
இவளும் 
சிரிக்கிறாள் வலிமையோடு 
சுமந்திட்ட 
பாரத்தை 
மடியேந்தி விழிகளுக்குள் 
ஈரம் 
நனைத்து ஆனந்தத்தில் 
மலர்ந்திட்ட 
பெண் சிசுவாக
 தாய் "!

பிச்சை !

Category : 0

கையேந்தியும் 
தட்டுகளுக்கு வாய்த்திடும் 
துட்டுகள் !
பிழைத்திட வழி 
வகுத்திடும் 
முதுமை உயிராகும்
சரியும் 
வாழ்வுக்கு  இளமை
பிழைப்பாகும்
உழைக்காதவனுக்கு 
காக்கும்  பிச்சை !