> >
Posted on வியாழன், 20 அக்டோபர், 2011 | No Comments


அன்பான வேண்டுகோளை 
பண்பாக சொன்னாய் ..!
தவறுதனை சுட்டிக்காட்டி 
தவறை அறியவைத்தாய் ..!

பொறுமையை காத்தால்
விவேகத்தை சொல்லும்..! 

வேகத்துடன் செயல்பட்டதால் 
செயளிழுக்கச்செய்யும்..!

ஒழுக்கமென்பதை ..
ஒழுக்கம்தான் வெல்லும்..!
வழக்கமான மாண்பு ..- 
விழிக்க விழுப்பம்தானாகும்..!

அறியாத தவறுக்கு 
கள்ளாமை காரணம் ..!
பொல்லாத எழுத்துக்களால் 
மனம் வாடிக் கொல்லும்.!

கொ( ல்  )ள்ளாமல்  சொல்வது 
இயல்பானது உன்வழக்கம்..!
தவறு செய்யும் முன்பே ..
மன்னிப்பை தேடுவது தான் என் பழக்கம் .!

ஊசியால் குத்தினால் ..
வலி ஊசிக்கில்லை ..
ஊசியாக நானா நினைக்கையில்
வருடுமுள்ளம் நெருடுகிறது ...

துன்பம் ஒன்று கண்டால்
துடித்து எழுபவன் ..!- துவலாமலிருக்க
பிறரின் கண்ணீரை துடைப்பவன் ..
மகிழ்ச்சியை கண்டு நெகிழ்ச்சியடைபவன் ..!


உன் வலியைத்தாங்கி ..!
கனமான என்னுள்ளம் ..!
மனமார .. மன்னிப்பை நாடும்
உலமார்ந்து கொடுப்பாயா?

                            வலியுடன் .... இலக்கியன் ...!





Leave a Reply