தியாகத்திற்கு தண்ணீரில்லை தாகத்திற்கு !
Posted on வெள்ளி, 4 ஜனவரி, 2013
|
No Comments
முல்லைப்பெரியார்
மறுத்தது ஏழை
சாதிக்கு குடி ...நீர்
வழங்க வெறுத்தது
சாதித்தது மத
வேறுபாடற்றது
நிருபித்தது ஒற்றுமை
கேரளா !
திராவிடம் மாநிலம்
ஆண்டிடும் கேவலம்
வாழும் இறைவன்
திருநாட்டில் வழங்கிய
பொக்கிஷம் நீர் !
கடவுள் மறுக்கும்
நாத்திகம் .........ஆத்திக
புனித நீர் பருகி
வாழ்வதெப்படி
கிருஷ்ணாவின்
சாத்தியம் ஆந்திரா !
காவேரி எங்களின்
காதலி ஒரு தலைக்
காதல் கொள்வது
காதலன் தமிழகமா ?
பிறந்தது எம்மிடத்தில்
வாழ்வது எமது குடும்பத்தில்
நிச்சயம் உறவு எங்களுக்கு !
வன்புணர்ச்சி செய்திட
முனைவது தமிழனா ?
விடமாட்டோம் கடத்திடவும்
கடக்கவும் விடமாட்டோம்
உயிரில் கலந்தது எமது
சொந்தம் ஏற்படித்திட
மறுத்திடுவோம் புது
பந்தம் கர்நாடகம் !
எந்த வளம் ஏதுமில்லை
நம் நாட்டில் கையேந்தியும்
தோழமை மறுக்கிறது
உயிர் வாழ தண்ணீர்
இருந்தும் தவிக்கிறது
பாலைக்காட்டில் !
முல்லைப்பெரியார்
மனது கல்லானது
கிருஷ்ணாவின்
முடிவு சிலையானது
காவேரி இழக்கும்
உறவு பிழையானது
தமிழகம் யாம் செய்திட்ட
என்ன தவறு பழி சுமத்துவது
பெரும் அவதூறு ?
சொந்தம் சொல்லிக்கொள்ள
எவருமில்லை அனாதையாய்
நிற்பது விழிகளில் பரிதாபம்
இல்லை பங்கு வழங்கி
உண்ட உணவும் எங்களின் எல்லை !
கொல்லை தனி
குடிவழங்கியதுதான்
எமது தொல்லை தமக்கென்று
சொத்து காத்திருந்தால்
தாகத்தை தீர்க்கும் சிறுப்பிள்ளை
பண்பாடாகும் அன்பில்
உதையும் வாசம் முல்லை !