> > தியாகத்திற்கு தண்ணீரில்லை தாகத்திற்கு !

தியாகத்திற்கு தண்ணீரில்லை தாகத்திற்கு !

Posted on வெள்ளி, 4 ஜனவரி, 2013 | No Comments


முல்லைப்பெரியார் 
மறுத்தது ஏழை 
சாதிக்கு குடி ...நீர் 
வழங்க வெறுத்தது 
சாதித்தது மத 
வேறுபாடற்றது 
நிருபித்தது ஒற்றுமை
கேரளா !


திராவிடம்  மாநிலம் 
ஆண்டிடும் கேவலம் 
வாழும் இறைவன் 
திருநாட்டில் வழங்கிய 
பொக்கிஷம் நீர் !

கடவுள் மறுக்கும் 
நாத்திகம் .........ஆத்திக 
புனித நீர் பருகி 
வாழ்வதெப்படி 
கிருஷ்ணாவின் 
சாத்தியம் ஆந்திரா !

காவேரி எங்களின் 
காதலி ஒரு தலைக் 
காதல் கொள்வது 
காதலன் தமிழகமா ?

பிறந்தது எம்மிடத்தில் 
வாழ்வது எமது குடும்பத்தில் 
நிச்சயம் உறவு எங்களுக்கு !
வன்புணர்ச்சி செய்திட 
முனைவது தமிழனா ?

விடமாட்டோம் கடத்திடவும் 
கடக்கவும் விடமாட்டோம் 
உயிரில் கலந்தது எமது 
சொந்தம் ஏற்படித்திட 
மறுத்திடுவோம் புது 
பந்தம் கர்நாடகம் !

எந்த வளம் ஏதுமில்லை 
நம் நாட்டில் கையேந்தியும் 
தோழமை மறுக்கிறது 
உயிர் வாழ தண்ணீர் 
இருந்தும் தவிக்கிறது 
பாலைக்காட்டில் !

முல்லைப்பெரியார் 
மனது கல்லானது 
கிருஷ்ணாவின் 
முடிவு சிலையானது 
காவேரி இழக்கும் 
உறவு பிழையானது 
தமிழகம் யாம் செய்திட்ட 
என்ன தவறு பழி சுமத்துவது 
பெரும் அவதூறு ?

சொந்தம் சொல்லிக்கொள்ள 
எவருமில்லை அனாதையாய் 
நிற்பது விழிகளில் பரிதாபம் 
இல்லை பங்கு வழங்கி 
உண்ட உணவும் எங்களின் எல்லை !

கொல்லை தனி 
குடிவழங்கியதுதான் 
எமது தொல்லை தமக்கென்று 
சொத்து காத்திருந்தால் 
தாகத்தை தீர்க்கும் சிறுப்பிள்ளை 
பண்பாடாகும் அன்பில் 
உதையும் வாசம் முல்லை !

Leave a Reply