திருநங்கை !
Posted on ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012
|
No Comments
ஆணும் -பெண்ணும்
உறவினிலே வேறுபடாமல்ஒன்றுப்பட்டு வேறெடுத்த
ஓரினமே ...பாலினம்!
=======================
- திருநங்கை !
குணத்தையும் மனத்தையும்
சொல்லையும் ,செயலையும்
ஒப்பாக்கி ..உண்மையாய்
ஒன்றிணைத்து தப்பாக
வரைந்திட்ட ஓவியனின் ஓவியம் .
தாய் -தந்தை-யின்றி ஒற்றையாய் ஒப்பற்று
கலப்படமாய் விந்தையிலே
ஒன்றிணைத்து இயற்கையின்
காவியப்படைப்பில் நாவுத்தூற்றிட
வித்திட்ட படைப்பாகி ,,,,
இனமாகி,பூமிக்கு கனமாகி ,,,
வந்துதிர்த்ததோர் ஊனப்பிறவியே ,,,!