> >
Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011 | No Comments



உண்மையின் நெருடல் …
உள்ளத்தின் குமுறல்..
தலை குனிந்த எழுதுகோல் – அவலங்களால்
தலைநிமிர்த்திட்ட எழுத்துக்கள் ..!
தர மிழுந்த தரகர்களின்
தராதிர அரசியல்..!
வரையற்ற போக்கு
தடம்புரளும் சொற்கள் !
கண்ணியத்தை விலைப்பேசி
நேர்மை யை அடகுவைத்து –
பணத்தி மீது மோகத்தால்
ஆசை நாற்காலி வாங்கினான்
அரசியலில் அமர்வதற்கு ..!
வியாபார சந்தையில்
பிடித்த வாக்குகள் …
இலாபம் குறிக்கோளால்
வேட்டையாடும் நரிகளாய் !
கோட்டையை பிடித்தால் மட்டுமே
ஆட்டையே போடமுடியும் ..!
நாட்டை பலியாக்கிட
தேடும் ஆதாயம் !எட்டாதவரை
சமூதாயம் நலம் பெற
நினைக்மாட்டான் …
தேவையானது கிடைக்காதவரை
உண்மை வாக்கும்
நிறை வேற்றமாட்டான் ..!
ஏமாற்றம் மக்களுக்கு
இழிவு சமுதாயத்திற்கு
மதுபோதையாய் ஆட்சி
அருந்திய பேதகன்
மதி மயக்கத்தில் ,,
தொடரும் பிரச்சனையை ..
. அறியாத மனசாட்சி ..!
தெளியாதவரை.-எவருக்கும்
விடியாது நன்மை …!

Leave a Reply