> > அன்புக்கணவாய் -நினைவோடு எப்போது வருவாய் !

அன்புக்கணவாய் -நினைவோடு எப்போது வருவாய் !

Posted on ஞாயிறு, 7 அக்டோபர், 2012 | No Comments


ஒவ்வொரு நிமிடமும் 
வருடங்களாகின நெருடல்கள் 
இருளோடு சூழ்ந்தன ......
கைப்பிடிக்கையில் 
இன்பமாகத்தானிருந்தன ......!

துன்பமின்றி இருந்த 
நாட்கள் சுகமோடுத்தான் 
கடந்தன பிரிவில்
வருத்தத்தோடு கழிந்தன!

கைப்பேசி பேச்சு ஆறுதலளித்திடும்   
சில நொடிகள் ஏக்கங்கள்
தணித்திடும் நினைவுக்குள் 
உதிர்த்திடும் கனத்திடும்
 உணர்வுகள் தனிமையில் 
வருந்திடும் அணு அணுவாய் 
யுகத்தோடு கொன்றிடும் !

கனவோடு வாழ்க்கை பகல்
 கனவாகி நின்றிடும் !
கற்பனையோடுத்தான் காலத்தை 
வீணாக்கி கழித்திடும் கற்பனையோடு 
இன்புறும் நாட்கள் !-இல்லாமளாகிடும் 

கணவா.... நீயில்லாது பூக்களுக்கு  
வாசமேது மலர்ந்திடும் வாடிடும் 
இளமை மோகம் உன் வரவை 
எதிர் நோக்கியே  கடந்திடும் 
இல்வாழ்க்கை சிறப்பாக 
எப்போதுதான் அமைந்திடும்  ?


Leave a Reply