சகோதரியின் பாசத்தின் வெளிபாடு !
Posted on ஞாயிறு, 7 அக்டோபர், 2012
|
No Comments
காணாத நிறை
உன்னில் காண்கிறேன் .......
தோழியே !{சகோதரியே }!
உன் பாசத்தில்
அம்மா இல்லாத
தேசத்தில்
குறைகளின்றி நிறைகளாய் !
நீ ஊட்டும் அன்பில்
தெகட்டாத
தாயாக மாறி நீயாக
அவளாகவே இருப்பது
மிகையே !
என் சந்தோசத்தில்
நீ தழைக்கும் நிமிடங்கள்
யாவும் நினைவில்
உள்ளத்தில் எப்போதும்
என்னின் உன்னத உறவு
இருக்கும்!
உன்னைவிட்டு
பிரிந்தாலும் நிமிடங்கள்
யாவும் உன்னினைவில்தான்
இமைக்கும் !
கழிகின்றன உயிர்
உள்ளவரை
நினைவுக் கூறும்
மனசாட்சி !