>
Posted on வியாழன், 15 செப்டம்பர், 2011 | No Comments


 உயிரை கொடுப்பவனும் அவனே
உயிர் பிய்ப்பவனும் அவனே !
கவலை மறந்திடு நண்பா
கடவுளை நினைத்திடு !

உன் கடமைகளை செய்திட மறவாதே
காண பல கண்கள் உள்ளதையும் மறவாதே !

உள்ளம் உயர்வாக 
நீ  நினைத்ததினால்...
இவ்வுலகம் நலம்பெற
 உன்னை பிரார்த்திக்கிறது!

தவறுகள் நடப்பது இயல்பே ...
மறப்பதும் மன்னிப்பதும் மரபே...!

கர்வம் கொண்டிருந்தால்...
உன்னுள்ளே அது அழிக்கும் !

எதையும் மறந்து...
 நீ நடந்தால் ...
உன் வளர்ச்சிக்கு
அது வழி வகுக்கும்!

நல் உள்ளம்
உன்னிடம் உள்ளதினால்
என்னுள்ளத்தில் உள்ளதை
கூறுகிறேன் ...!

பல்லாயிரம் வருடங்களுக்கு ...
மேலாக ,, உன் எழுத்துகள்
 நிலைத்திடவே  பார்க்கிறேன் ..
மனமுவந்தும் மன்றாடியும்  வேண்டுகிறேன்!

தமிழ் பலகவிகள் நாம் படிக்க
விரைவில்,,,
உன் செவியில் 
அது ஒளிக்கும் !

சிகிச்சை இன்றி 
குணமாக ...
அந்த மருத்துவரின்
மருந்து சிறக்கும் !

வருத்தத்தில் இருக்கும்
 உன் குடும்பம்
இன்பத்தில் மிதக்கும் !

மருத்துவர் தந்த 
நாளை எண்ணி
வருந்தாதே நண்பா !
தன்னம்பிக்கை இழுக்காதே ...!

உன் குடும்பத்தில்
நற் சேதியை சொல்லி
வருத்தத்தில் இருந்து
முதலில் அவர்களை நீ  மீட்டு !

கடவுள் மீது பாரத்தைப்ப்போடு  
அவன் நிச்சயம்
நற் மனிதனை காப்பான்
கவலை மறந்திடு!

நீ நலமுடன் வளமுடன்
வாழ ,,,
உளமாற வாழ்த்தி
வேண்டிக்கொள்ளும்!

கவிஞர் இ.முபாரக்.  

Leave a Reply