> > கவிதை

கவிதை

Posted on வியாழன், 29 செப்டம்பர், 2011 | No Comments


கவிதை 
மறுப்பு.!

என் இதயத்தில்...
அவளிட்ட கோளத்தால்....
நுழைவாயில்..எழிலானது.!
கண்ணீரை விரும்பாத...விழிகள்.!

தானம் செய்வோம்-வாழவைப்போம்.!

நித்தம், நித்தமாய்...
சாகும் மனிதனுக்கு..
உயிர் செய்யும் யுத்தம்.!

வெட்டுகளில்லை, கட்டுகளில்லை...
ஏதுமின்றி...!
வாழும் வாழ்கைக்கோர்..
புது அர்த்தம்.!

கீரல்பட்டால் சிந்தும்
சிறுத்துளி இரத்தத்தை
தானமாக்குவோம்.!

ஆயுள்வரை வாழவைக்க...
தானமிட்டு.!பலரை..
மரணத்திலிருந்து..
மீட்டெடுப்போம்.!

அன்றும் - இன்றும்.!

அன்று மரம் நட்டார்கள்.!
நாடு செழிப்பதற்க்கு..!
அதை... வெட்டுகிறார்கள்..!
தான் செழித்து.. நாட்டை 
அழிப்பதற்கு.!

தேடல்கள் !

அவள் பயணிக்கும்
அதே பேருந்தில்தான்..
தினம்.... நானும்
 பயணிக்கிறேன்...!
இறங்குமிடமறியாமல்.!

பூங்காவணத்தில்..
பூர்த்த பலப்பூக்கள்..!
அழகாய் எதுவும்
பூர்க்கவில்லை..புன்னகையோடு...!

இவள் மட்டும்
மனதில்,,,
பூர்த்தவளாய்....!

சில நேரம் ...
பயணம் சுமையாகும்..!
விரும்பையில்..மனதிர்க்கு
இதமாகும்.!

இப்போது...
எப்போதும் சுகமாகிறது.!
கற்பனையோடு...
உலாவருகையில்...
பேருந்து இரதமாகிறது.!

ஒரு நாள் வரவில்லை..!
வரவேற்காத..
வாரம் ஒன்று
 ஞாயிற்றுக்கிழமை..!

உறக்கமின்றி...
நிம்மதியின்றி..!
காணாத கண்கள்..
வருதத்துடன்...
வாடிய உள்ளம்.!
பலப்பேருந்து...
நிழற்குடயிலும்..
ஆவலோடு கல்லூரி..
வாசல்களிலும்..
காதிருக்கிறது .

அவள் வருவாளென்று.. .
தன்னம்பிக்கையோடு..!
காத்துக்கொண்டிருக்கும் 
என் கால்கள்.!







Leave a Reply