Posted on வியாழன், 20 அக்டோபர், 2011
|
No Comments
உண்மையின் நெருடல் ...
உள்ளத்தின் குமுறல்..
தலை குனிந்த எழுதுகோல் - அவலங்களால்
தலைநிமிர்த்திட்ட எழுத்துக்கள் ..!
தர மிழுந்த தரகர்களின்
தராதிர அரசியல்..!
வரையற்ற போக்கு
தடம்புரளும் சொற்கள் !
கண்ணியத்தை விலைப்பேசி
நேர்மை யை அடகுவைத்து -
பணத்தி மீது மோகத்தால்
ஆசை நாற்காலி வாங்கினான்
அரசியலில் அமர்வதற்கு ..!
வியாபார சந்தையில்
பிடித்த வாக்குகள் ...
இலாபம் குறிக்கோளால்
வேட்டையாடும் நரிகளாய் !
கோட்டையை பிடித்தால் மட்டுமே
ஆட்டையே போடமுடியும் ..!
நாட்டை பலியாக்கிட
தேடும் ஆதாயம் !எட்டாதவரை
சமூதாயம் நலம் பெற
நினைக்மாட்டான் ...
தேவையானது கிடைக்காதவரை
உண்மை வாக்கும்
நிறை வேற்றமாட்டான் ..!
ஏமாற்றம் மக்களுக்கு
இழிவு சமுதாயத்திற்கு
மதுபோதையாய் ஆட்சி
அருந்திய பேதகன்
மதி மயக்கத்தில் ,,
தொடரும் பிரச்சனையை ..
. அறியாத மனசாட்சி ..!
தெளியாதவரை.-எவருக்கும்
விடியாது நன்மை ...!