> >
Posted on சனி, 22 அக்டோபர், 2011 | No Comments

பொல்லாதவன்  ஒருவன் !
சொல்லாமல் வந்தான் !
செல்லாத காசை ..-தந்து 
வாக்கை  கொள்ளையடித்து சென்றான் ! ,,


கல்லாதவராய் நாங்கள்..!
கள்ளாமையாச்சு ..-  ஏந்தாத
கரத்தில் பிச்சை ..!
வாய்த்தது சில்லரையாச்சு..!

இல்லாததொன்றை..
முரணாக செய்வான்  ..!
வராததொன்றை முன்னின்று 
வரவேர்ப்பான்  .!நம்பியவரை 
கழுத்தையும் அறுப்பான் !

நுழையாத வீட்டுக்குள்ளே ..
மறைந்து வந்த ஆமை ..!
மாசு அடையவைத்துவிட்டு ..!
வீதியிலேஅறியாமல் போகும் ..!

வரலாற்றில் கண்டிடாதொன்றை
காணவும் வைப்பான்  /!
நிர்வாணமாக்கிய அங்கத்தை யும்
தயங்காமல் காண்பிப்பான்  ,,!

அரசியலுக்கு வந்தால் ...
ஆண்டியாகத்தான் ஆவார் ..!
சொல்லியக்கூற்றை உடைக்க
ரௌடியாகி நிர்ப்பான்  ...!

ஓட்டுப்போட்ட மக்களுக்கு
பாதுகாக்க மறுப்பான்     ,,,!
ரூபாய் நோட்டுக்காக வந்து  ..
\பூட்டையும் உடைப்பான் ..!

தட்டிக்கேட்க போனால் ...
தடியடி விழும் ..!
சண்டைகளிட்டால்   நம் ..!
மண்டைகல்தான் உடையும்..!

விடையின்றி போகும் ...
போக்கு தடையின்றி யாகும் ..!
ஆளும்வரை ஆயிரம்
உயிர்கள் பலப் போகும்..!

 தேர்தலாகும் மறு முறை    ..
ஆடும்வரை ஆட்டம்..- எண்ணுவான் !
பணத்தை இரைத்தால் .
எல்லாமே  விசுவாசத்தைகாட்டும் !

தேர்தலோர் ....
ஆடுக்கலாமாகும் ..!
சூழ்ச்சி செய்தால் ...
போர்க்களமாகும்.. ..!

தந்திரவாதிகளுக்கு
அதுவோர்
மந்திரமாகும் ..!
சமுதாயம்!

 சிந்திக்காமல்
 போனால் ..
ஊரே
சீரழிந்துப்போகும் ...

செயளிழுந்து
செயல்பட்டால் !
பழுதாகிப்போகும்
மனித நேயம்..!
\
நல்லவர்களை
தேர்ந்தெடுப்போம் ..!
சமூகம் முன்னேற
வழி வகுப்போம் !

உண்மைகள்
 வென்றால்
நன்மைகளாகும்
 வீட்டயும்- ,நாட்டையும்Publish Post
அது பாது காக்கும் .!

Leave a Reply