> >
Posted on புதன், 2 நவம்பர், 2011 | No Comments



நிலையில்லா வாழ்க்கை !
நிரந்தரமான மண்ணறை.!

கலியுலக வாழ்வு நிரந்தரமல்ல !
மண்ணற வாழ்வே நிரந்தரம் !
வருமுன்னே எதையும் 
கொண்டு வருவதில்லை ..
இறந்த பின்பும் எதையும் 
கொண்டு செல்வதில்லை 
பிறந்தப்போது அறியா குழந்தை  
வளர்ந்தபொழுது ஒரு மனிதன் .-தனிமையாய் 
இறையடி சேர்வோம் .!

இறைவன் தரும் செல்வங்கள் யாவும் 
சோதனையே ...அறிந்திட்டால் 
உன்னைவிட சிறந்தவன் 
உலகிளில்லையே ...!
இருக்கையில் நம்மிடம் 
இருக்கட்டும் நல்ல குணம்  ..
இருப்பதை தந்தால் வள்ளல் 
சொல்லிடும் பல மனம் !

இருக்கையில் போற்றி....
உதடுகள் உச்செரிக்காவிட்டாலும் ..
வாங்கி சுவைத்த நாக்கால் ..
குடல்களும் சொல்லும் 
உள்ளம் மறைத்த உவமைகள்
உயர்வாகி அங்கே நிற்கும் ..!

நீ செய்த தர்மங்கள்தான் 
நரகத்தை வெல்லும் ..!
செய்த நற் செயல்கள்தான் 
சொர்க்க கதுவை ...
திறந்து முன் செல்லும் .!

இறை வழிப்பாதை .. 
இறையடி சேர்க்கும் ..
நபி போதித்த ஞானம் ...
நல் வழிப்படுத்தும் ..!

சிந்திப்போம் ..! தர்மம் செய்வோம் ! நன்மைகள் சேர்ப்போம் !
இறைஞ்சிடுவோம் !அவனை பணிந்திடுவோம் !சொர்கத்தை அடைந்திடுவோம் !
தீர்ப்பு நாளன்று ..சொர்க்க வாயல் ..  நமக்காகும் ...!
சொர்க்க கத வுகள் திறந்து வரவேற்கும் ..!

Leave a Reply