> >
Posted on செவ்வாய், 15 நவம்பர், 2011 | No Comments

யாரவள் ?

முதன் முதலில்
அவளை பார்க்கையில்
அவளழகு
தீண்டிச்சென்றது !

கொள்ளா ஆசையால்
நிறைந்த மனது
கண்கள்
பின் தேடிச்சென்றது !

முன்னே தோன்றிய
மீனாய் அவள் !
சிக்காமல்
கையிலிருந்து நழுவியது .!

தூண்டில் போடும்
விழிகளிரண்டு
வருவதை
எதிர் நோக்கும் பார்வை.!

இளமை !

குழாயில் ...
சீறிப்பாய்ந்து
வந்த தண்ணீர்
வரவில்லை வாடி
நிற்கும் கிணறு .!-பழுதடைந்து
துரும்பாகி நிற்கிறது !
எதற்கும் உதவாத
இரும்பு .!

Leave a Reply