> > கனவுத்தொட்டிலாகும் சிலருக்கு கனத்தொட்டில்.!

கனவுத்தொட்டிலாகும் சிலருக்கு கனத்தொட்டில்.!

Posted on திங்கள், 26 மார்ச், 2012 | No Comments


கனவுத்தொட்டிலாகும் சிலருக்கு கனத்தொட்டில்.!

வசந்தக்கனவு
ஆசைத்தொட்டிலிலாட!
கனவுத்தொட்டிலில்
மிதக்கிறது கற்பனை!

எதிர்ப்பார்த்த பயணம்
மயானமாகிட.....!
கட்டிய கோபுரம்
நிலைகுலைந்தது"!

சிறகுகளாய் பறந்த
சிந்தனை"'!-மௌனமாய்
கூண்டிலடிப்பட்டு
சிறையாகி கடக்கிறது"!

உள்ளம் சுமந்த
பாரங்கள் யாவும்-தனிமையில்
கைப்பேசியில்
கண்ணீர்வடிக்கிறது"!

சுகவாழ்வைத்தேடி"
வந்தவர்களுக்கு"-
வெளி நாடு வாழ்க்கை
மோகம் கானலானது".!

இளமையைத் தொலைத்து
சரிந்த வாலிபம்-முதுமையோடு
வருந்தி வாடி"
புது விடையத்தேடுது:!

பிறிந்து-இழந்து!
தவிக்கும் உறவுகளால்
 முடிவை மாறிப்போனது"!

கூலி,-வேலை செய்து
பிழைத்தாவது
நிறைவான நிம்மதியை
கிடைக்குமா?தேடலாகுது "!

தாயகமேசிறந்தத
நினைத்தால்உயர்ந்த 
சிகரத்தையும்
எட்டி பிடிக்கலாம்"!

வெளி நாடு மோகம்"
உயர்வாய் கொண்டால்..
பண தேகத்தால்..அடியோடு
நம்மை மாய்க்கலாம் "!

 தேசம் விட்டு
தேசம் கடக்க அறவே
மறந்தால்  "-இனிமையான 
 வாழ்கையை சுவைக்கலாம் ..!

நம் தாயகத்தில்
விடையலை பார்ப்போம்"!
உழைப்போம் உயர்வோம்"
நம் தாயகத்தில்""!





Leave a Reply