> > கவிதை தொகுப்பு

கவிதை தொகுப்பு

Posted on ஞாயிறு, 8 ஏப்ரல், 2012 | No Comments


அழகு!


சிறப்பு "மலருக்கு "
அழகு பிறப்பாகும்!
இல்லாவிடில் கொடியது
கொடியில் வாடும்
உதிரும் "இறப்பாகும்".!


ராக தேவதை எம்.எஸ். சுப்பு லட்சுமி !


மா..தவம் கண்ட 
மதுரை மாநகரம்!
உயர் கலை சிகரங்களில்
கண்டெத்த ''ஒலி"(குரல்)
சிகரம் ! - செதுக்கிய 
சிற்பியின் "உளி"!


கும்பகோணம் "தீ "விபத்து (நினவு நாள்)!


"தீ"க்கும்-
"குச்சிக்கும் "
மூண்டது 
மோதல் !


"இருவரும் "
உரசிக்கொண்டதால்
வெடித்தது "
"எரிப்போர்"!


பட்டாசுகலாய்
" வெடித்து  "
சிதரிய 
கூறைகள்!


பட்டாடைகளாய்
 "மின்மினித்த"
"பொன்"
வண்டுகள்!


பொசங்கின 
"நெருப்பு 
போரில்"!
காணுமிடமறியாமல் !


"கருகிய"
கூடும்-
கூடாகிய
பள்ளியும்!


மூளைக்கும் 
மொட்டுகளும்!
தொலைத்த 
"சிட்டுக்களும்"!


"நினைவு "
தழம்புகளோடு 
அனுசரிக்கும்
" தினம்"!


"ஆண்டாண்டாகும்"
வரலாற்று "சரித்திரத்தில் "
ஒரு நாளாகும்
கருப்புத்தினம்.!





Leave a Reply