கவிதை தொகுப்பு
Posted on ஞாயிறு, 8 ஏப்ரல், 2012
|
No Comments
அழகு!
சிறப்பு "மலருக்கு "
அழகு பிறப்பாகும்!
இல்லாவிடில் கொடியது
கொடியில் வாடும்
உதிரும் "இறப்பாகும்".!
ராக தேவதை எம்.எஸ். சுப்பு லட்சுமி !
மா..தவம் கண்ட
மதுரை மாநகரம்!
உயர் கலை சிகரங்களில்
கண்டெத்த ''ஒலி"(குரல்)
சிகரம் ! - செதுக்கிய
சிற்பியின் "உளி"!
கும்பகோணம் "தீ "விபத்து (நினவு நாள்)!
"தீ"க்கும்-
"குச்சிக்கும் "
மூண்டது
மோதல் !
"இருவரும் "
உரசிக்கொண்டதால்
வெடித்தது "
"எரிப்போர்"!
பட்டாசுகலாய்
" வெடித்து "
சிதரிய
கூறைகள்!
பட்டாடைகளாய்
"மின்மினித்த"
"பொன்"
வண்டுகள்!
பொசங்கின
"நெருப்பு
போரில்"!
காணுமிடமறியாமல் !
"கருகிய"
கூடும்-
கூடாகிய
பள்ளியும்!
மூளைக்கும்
மொட்டுகளும்!
தொலைத்த
"சிட்டுக்களும்"!
"நினைவு "
தழம்புகளோடு
அனுசரிக்கும்
" தினம்"!
"ஆண்டாண்டாகும்"
வரலாற்று "சரித்திரத்தில் "
ஒரு நாளாகும்
கருப்புத்தினம்.!