இறுதி நாளன்று நரகத்தில் கொண்டு சேர்க்கும் ஆட்சதிகாரம் !
Posted on செவ்வாய், 19 ஜூன், 2012
|
No Comments
எங்கே எமது மனிதாபிமானம்
தேடலாகும் சமுதாயம்
வேரறுந்த ஒற்றுமை
சீர்குலைந்து நிற்கிறது !
உள்ளத்தில் ஈரமின்றி
இரக்கமின்றி மிருகமாய்
இனம் மனிதனை
கொன்று குவிக்கிறது !
வீடிருந்தும் நடுவீதியிலே
கேட்பார் நாதியின்றி
விலங்குகளாய் சுதந்திரத்தை
தேடி உயிரை மாய்க்கிறது !
கணவனைப்பிரிந்த
மனைவியும் -மகனை
இழுந்த தாயும்
பாசத்தால் ஓலமிடுகிறது !
முகவரிமறந்த
பிஞ்சுகள் பரிதவித்து
அவல கண்ணீரோடு
உறவை தேடி ஏங்குகிறது !
வானத்தில் வட்டமிடும்
கழகுகளும் !-தெருக்களில்
ஓடும் ஓநாய்களும்
இரத்தத்தை குடிக்கவே விரும்புகிறது !
மறுமலர்ச்சி நாடும்
நாடு -விளங்குகளிலான
காடு சர்வாதிகாரத்தின்
பிடியில் வேட்டையாடுகிறது !
விட்டு விட்டு துடிக்கும் நாடி !
கண்டு தவிக்கும் விழிகள்
ஒரு நொடி துடிக்க மறுக்கும்
இதயம் கனத்து நிற்கும் !
காணும் காட்சிகளால் தீவிர
வாதத்தை உருவாக்கும் !
ஆட்சி அதிகாரத்தில் அரசாட்சி !
புரட்சியால் ஆள நினைக்கிறது !
மங்கையின் சிறப்பை
உணர்த்தும் நீதியின்
புனித கற்பை அற்ப கேவல
அவலப்பசிக்கு இறையாகுகிறது !
தன்னை ஈன்றவள்
பெண் ஒருவள் என்பதை
மறந்தும் !பெற்ற தாயின்
நினைவை துறந்த
மனித நேயம் !
மண்ணில் புதைந்த கேவலம் !
சிறகுளாய் விழிக்கும்
உறவுகள் பிரிவுகளை கொடுக்கும்
தவிக்கும் தனிமை !
இறப்பான் விரைவில் ..!
படைத்த கடவுளை
மறப்பவனும் ,மறுப்பவனும்
மிதிப்படுவான் ஒருநாள் !
கொடூர நரகத்தின்
பிடியில் விரைந்தோடும்
காலம் முதுமையை
சுமக்கும் ஆயுள் !
எவ்வித சர்வதிகாரத்தாளையும்....
வெல்ல முடியாத
விதி !ஒரு நாள் ,,,,
வந்தடையும்!
ஆடிய ஆட்டத்தின் முடிவு !
தவறை உணர்ந்தும்!
திருந்த முயன்றாலும்
செய்திட்ட தவருக்காகும்
அப்போது சேதாரம்!
செயகூலியால் மிஞ்சியது
ஆதாரம் சாட்சிகளாகும்!
உண்மை வெள்ளவாகும்
இறுதிநாளின் அந்நேரம் !
நாட்டிற்காக போராடியவன்
புரிந்த செயல் !-நல்லறத்தால்
சொர்க்க வாயிலைடைவான்
இன்பத்தோடு உலாவருவான் !
கொடுங்கோலாட்சி புரிந்தவன்
தீய நெருப்பில் எரிவது திண்ணம் !