> > இறுதி நாளன்று நரகத்தில் கொண்டு சேர்க்கும் ஆட்சதிகாரம் !

இறுதி நாளன்று நரகத்தில் கொண்டு சேர்க்கும் ஆட்சதிகாரம் !

Posted on செவ்வாய், 19 ஜூன், 2012 | No Comments


எங்கே எமது மனிதாபிமானம் 
தேடலாகும் சமுதாயம் 
வேரறுந்த ஒற்றுமை 
சீர்குலைந்து நிற்கிறது !

உள்ளத்தில் ஈரமின்றி 
இரக்கமின்றி மிருகமாய் 
இனம் மனிதனை 
கொன்று குவிக்கிறது !

வீடிருந்தும் நடுவீதியிலே 
கேட்பார் நாதியின்றி 
விலங்குகளாய் சுதந்திரத்தை 
தேடி உயிரை மாய்க்கிறது !

கணவனைப்பிரிந்த 
மனைவியும் -மகனை 
இழுந்த தாயும் 
பாசத்தால் ஓலமிடுகிறது !
முகவரிமறந்த 
பிஞ்சுகள் பரிதவித்து 
அவல கண்ணீரோடு 
உறவை தேடி ஏங்குகிறது !

வானத்தில் வட்டமிடும் 
கழகுகளும் !-தெருக்களில் 
ஓடும் ஓநாய்களும் 
இரத்தத்தை குடிக்கவே விரும்புகிறது !

மறுமலர்ச்சி நாடும் 
நாடு -விளங்குகளிலான
காடு சர்வாதிகாரத்தின்
பிடியில் வேட்டையாடுகிறது !

விட்டு விட்டு துடிக்கும் நாடி !
கண்டு தவிக்கும் விழிகள்  
ஒரு நொடி  துடிக்க மறுக்கும் 
இதயம் கனத்து நிற்கும்  !

காணும் காட்சிகளால் தீவிர 
வாதத்தை உருவாக்கும் !
ஆட்சி அதிகாரத்தில் அரசாட்சி !
புரட்சியால் ஆள நினைக்கிறது !

மங்கையின் சிறப்பை 
உணர்த்தும் நீதியின் 
புனித கற்பை அற்ப கேவல 
அவலப்பசிக்கு இறையாகுகிறது ! 
தன்னை ஈன்றவள் 
பெண் ஒருவள் என்பதை 
மறந்தும் !பெற்ற தாயின் 
நினைவை துறந்த 
மனித நேயம் !

மண்ணில் புதைந்த கேவலம்  !
சிறகுளாய் விழிக்கும் 
உறவுகள் பிரிவுகளை கொடுக்கும் 
தவிக்கும் தனிமை !

 இறப்பான் விரைவில் ..!
படைத்த கடவுளை
மறப்பவனும் ,மறுப்பவனும் 
மிதிப்படுவான் ஒருநாள் !

கொடூர நரகத்தின்
 பிடியில் விரைந்தோடும்
 காலம் முதுமையை 
சுமக்கும் ஆயுள் !

எவ்வித சர்வதிகாரத்தாளையும்....
வெல்ல முடியாத 
விதி !ஒரு நாள் ,,,,
வந்தடையும்!

 ஆடிய ஆட்டத்தின் முடிவு !
தவறை உணர்ந்தும்!
திருந்த முயன்றாலும் 
செய்திட்ட தவருக்காகும் 
அப்போது சேதாரம்!

செயகூலியால் மிஞ்சியது 
ஆதாரம் சாட்சிகளாகும்!
உண்மை வெள்ளவாகும் 
இறுதிநாளின் அந்நேரம் !

நாட்டிற்காக போராடியவன் 
புரிந்த செயல் !-நல்லறத்தால் 
சொர்க்க வாயிலைடைவான்   
இன்பத்தோடு உலாவருவான் !

கொடுங்கோலாட்சி புரிந்தவன் 
தீய நெருப்பில் எரிவது திண்ணம் ! 

Leave a Reply