முரண்பாடுகள்!
Posted on சனி, 16 ஜூன், 2012
|
No Comments
மண்ணை நேசித்து
முத்தமிட்டு நித்தம் !-
நித்தமாய் சத்தமின்றி விட்ட
சொட்ட சொட்ட இரத்தம் !
சாதியின்றி,மத பேதமின்றி
வீதியிலே நீதிக்காக
போராடிய மனிதநேயம்
போராடிய மனிதநேயம்
கூண்டோடு அடிமைகளாய் ..!
குண்டு துளைத்தும் உறவு
தொலைத்தும் சிறையிலே
அகதிகளாய் சித்தரவதித்தும்
விடா..முயற்ச்சியில் ..!
போராளிகளாய் உயிர்
நீத்தேடுத்து பெற்றுடுத்த
சுதந்திரம் !தேடியும்
கிடைக்கவில்லை தேடியப்போது !
சுரண்டிட வந்த
களவாணிகள் விரண்டோடிட
நிரந்திரமாய் தந்திரங்களிட்ட
மதவாதிகளின் மந்திரங்கள்!
நாட்டை வேரறுத்து
கூறுப்போட்டு விற்ப்பனைக்கு
கூவி விற்று வருகின்ற
நிலையில் தியாகிகளின் !
சிந்திய வியர்வைத்துளி
தியாகங்கலாய் யாகங்கள் செய்ய
வறுமையோடு பிச்சைகேட்டு
கையேந்துகிறது ஜனநாயகம் !
பண நாயகத்தால் ...தூண்டிவிட்ட
வன்முறைகள் -தீவிரவாதம்
தீவிரமாய் தலைவிரித்து விளையாட
வேடிக்கைப்பார்க்கிறது அரசியல்!
வருடா..-வருடமாகும் சுதந்திரம்
பிறக்கும் நம் தேசிய கோடிக்கு !
ஒரு நாளுக்காவது கிடைக்குமா?
அகிம்சையில் எதிர்நோக்கும் பாரதம் !