> > முரண்பாடுகள்!

முரண்பாடுகள்!

Posted on சனி, 16 ஜூன், 2012 | No Comments


மண்ணை நேசித்து 
முத்தமிட்டு நித்தம் !-
நித்தமாய் சத்தமின்றி விட்ட 
சொட்ட சொட்ட இரத்தம் !

சாதியின்றி,மத பேதமின்றி 
வீதியிலே நீதிக்காக
போராடிய மனிதநேயம் 
கூண்டோடு அடிமைகளாய் ..!

குண்டு துளைத்தும் உறவு
தொலைத்தும் சிறையிலே 
அகதிகளாய் சித்தரவதித்தும் 
விடா..முயற்ச்சியில் ..!

போராளிகளாய் உயிர் 
நீத்தேடுத்து பெற்றுடுத்த
சுதந்திரம் !தேடியும் 
கிடைக்கவில்லை தேடியப்போது !

சுரண்டிட வந்த 
களவாணிகள் விரண்டோடிட 
நிரந்திரமாய் தந்திரங்களிட்ட 
மதவாதிகளின் மந்திரங்கள்!

நாட்டை வேரறுத்து 
கூறுப்போட்டு விற்ப்பனைக்கு 
கூவி விற்று வருகின்ற 
நிலையில் தியாகிகளின் !

சிந்திய வியர்வைத்துளி 
தியாகங்கலாய் யாகங்கள் செய்ய 
வறுமையோடு பிச்சைகேட்டு 
கையேந்துகிறது ஜனநாயகம் !

பண நாயகத்தால் ...தூண்டிவிட்ட
வன்முறைகள் -தீவிரவாதம் 
தீவிரமாய் தலைவிரித்து விளையாட 
வேடிக்கைப்பார்க்கிறது அரசியல்!

வருடா..-வருடமாகும் சுதந்திரம் 
பிறக்கும் நம் தேசிய கோடிக்கு !
ஒரு நாளுக்காவது கிடைக்குமா?
அகிம்சையில் எதிர்நோக்கும் பாரதம் !

Leave a Reply