எங்கே எமது மனித நேயம் !
Posted on ஞாயிறு, 24 ஜூன், 2012
|
No Comments
பொல்லாருலகில் இல்லாரில்லை
உள்ளார் சொல்வார் நல்லவரில்லை !கள்ளவருள்ளார் கல்லாரிள்ளார்
ஒற்றுமையை போதிக்க ஒருவருமிள்ளார் !
கடவுள் ஒன்று சொல்பவருண்டு
தெய்வங்களாகும் மதங்களுக்கென்று !
ஏசுப்பிறந்தும் கருணை புதைந்தது !
முகமதுவின் தனித்துவம் ஏகத்துவத்தை இழந்தது !
புத்தரின் ஞானம் சோபிக்கவுமில்லை
திருவள்ளுவனின் ஓலை கிடைத்தும் சாதிக்கவுமில்லை !
சாதிக்காக நீதிகளானால் வீதிகள்
தோறும் உருவாகும் போர்க்களம் !
நீயா -நானாவென திரிகையில்
இருண்ட குளங்களால் உடல்கள் சரிந்திடும் !
பிரிந்தசாதிகள் மதங்களை மறந்தால்
துறந்திடும் பகைமை உதயமாகும் ஒற்றுமை !
மனிதனுக்கென்று ஒருவனே கடவுளானால் ...
ஏற்றமும் தாழ்வும் மனிதனுக்கில்லை பிரிவினை !
நட்புறவை பேணினால் சகோதரத்துவமாகும்
உறவாய் கருதினால் அங்கு சமத்துவம் பிறக்கும் !
சத்தமும் ,யுத்தமும் பந்த உறவானால்
மனித நேயத்தால் கருணை மகத்துவம் பிறக்கும் !
இணைந்த மனிதன் பிரிந்திட்டால் ....
சமூகம் அழியும் ,பலச்சமுதாயங்கலுருவாகும் !
புதிய சட்டங்கள் கையில் அதிகாரங்கள்
பெருகும் மதவாதிகளுக்கு தீவிரவாதம் சிறகாகும் !
உயிரை கொள்வதே பாவமென உணரினால்
சிதைந்த ஒற்றுமையும் இணைந்த உறவாகும் !
ஒற்றுமையை கடைப்பிடிப்போம்
நல்ல நட்புறவை பற்றிப்பிடிப்போம் !