அம்மா !{இவளும் தாய்}!
Posted on வியாழன், 4 அக்டோபர், 2012
|
No Comments
சுகத்திற்கு சுயமிழந்து
மோகத்தில் தடுமாறி
வழுக்கி விழுந்தாலும்
கனத்த சுமையிலும்
கலங்கியே சுமந்திடுவாள்
களங்கத்தோடு வாழ்ந்திடுவாள்
அவலப் பட்டத்தோடு ...!
உலகம் வெறுத்தாலும்
அமைதியை காத்திடுவாள்
வருத்தங்கள் கொன்றாலும்
உயிரோடு அமைதி பிள்ளை
பெற்றெடுக்கும் வரையில்
துன்பத்தில் நீந்திடுவாள்
கரையேற்றி மகிழ்ந்திடுவாள்
இறுதிவரை ....!- உயிர் இறப்பின்
இருள் மறையும் இழிவுச் சொல்
உயர்ந்தே விழையும் சாதனைகளோடு
முடியும் வாழ்க்கை தொடரும் !