மகாத்மா "காந்தி "!
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
- காந்தியத் "தீ "யில்
உணர்வில் ஈர்த்திட்ட
காந்த சக் "தீ "!
- பாரதத்தில் பற்றியத்
"தீ"யில் அமை"தீ "யை
கற்பித்தவர்
சா "தீ"யை அணைக்க
சுதந்திரத் "தீ" க்காய்
விடுதலைக் பெற்றவர் !
- வறுமையைகண்டு
ஆடையிறக்கி
வெறுமன சுற்றியவர்
பகைமைக்கு
ஒற்றுமையை கற்பித்தவர் !
- சோதனைகளை
சாத்தியமாக்கி சத்தியத்தால்
சாதித்தவர் !
மகாத்மா இந்திய
வரலாற்றின் சகாப்தமா !
- "தீ "
கருதும்
நாம் நெருங்கினால்
அழிக்கும்
நெருப்பில்லை அவர்
அகிம்சை வா "தீ "{சாந்தி }
பொருளிட்டவர்!
- நாட்டின் இருளை
மகாத்மாவாய் குண்டு
"தீ "யிலே
உயிரைத் துறந்தவர்
வாழ்கிறார் !
- இன்று !மதுவின்
மோகத்தில்
பேதளித்த விபச்சாரத்தில்
சூதுவின்
அட்டையில் கையூட்டுப்
பெரும் அரசாங்க
ஊழல்வாதிகளின்
கரங்களில் !
- மகிழ்ச்சியில் தவழ்கிறார்
ஏழ்மை துயரை
துடைக்கியலா
வான்முறைகளமாக்க பரிமாறும்
அமைதியை
குலைக்கவாகும் வேட்டு !
- நினைத்தே
காகிதமாய்
கசங்கிபுழங்குகிறார்
குற்றவாளியாக
ஊழல்வாதியின்
கரத்தில்
உத்தம மகாத்மா "காந்தி "!