> > மகாத்மா "காந்தி "!

மகாத்மா "காந்தி "!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


  • காந்தியத் "தீ "யில் 

உணர்வில் ஈர்த்திட்ட

காந்த சக் "தீ "!


  • பாரதத்தில் பற்றியத்

"தீ"யில் அமை"தீ "யை

கற்பித்தவர்

சா "தீ"யை அணைக்க

சுதந்திரத் "தீ" க்காய்

விடுதலைக் பெற்றவர் !



  • வறுமையைகண்டு 

ஆடையிறக்கி

வெறுமன சுற்றியவர்

பகைமைக்கு

ஒற்றுமையை கற்பித்தவர் !

  • சோதனைகளை 


சாத்தியமாக்கி சத்தியத்தால்

சாதித்தவர் !

மகாத்மா இந்திய

வரலாற்றின் சகாப்தமா !

  • "தீ "
வார்த்தைக்கு "தீ"மை
கருதும்
நாம் நெருங்கினால்
அழிக்கும்
நெருப்பில்லை அவர்
அகிம்சை வா "தீ "{சாந்தி }
பொருளிட்டவர்!


  • நாட்டின் இருளை 
நீக்கி
மகாத்மாவாய் குண்டு
"தீ "யிலே
உயிரைத் துறந்தவர்
வாழ்கிறார் !


  • இன்று !மதுவின் 
விலையில் மாதுவின்
மோகத்தில்
பேதளித்த விபச்சாரத்தில்
சூதுவின்
அட்டையில் கையூட்டுப்
பெரும் அரசாங்க
ஊழல்வாதிகளின்
கரங்களில் !


  • மகிழ்ச்சியில் தவழ்கிறார் 
கண்ணீரோடு
ஏழ்மை துயரை
துடைக்கியலா
வான்முறைகளமாக்க பரிமாறும்
அமைதியை
குலைக்கவாகும் வேட்டு !


  • நினைத்தே
வாடும் ரூபாய் நோட்டில்
காகிதமாய்
கசங்கிபுழங்குகிறார் 
குற்றவாளியாக
ஊழல்வாதியின் 
கரத்தில் 
உத்தம மகாத்மா "காந்தி "!


Leave a Reply