Posted on புதன், 19 அக்டோபர், 2011
|
No Comments
நானும் என் எழுத்தும்.!
காற்றை கையில் பிடிக்கயிலாவிட்டாலும் ..
காலம் தாண்டி வாழ்ந்திடுவேன் ..!
நிலவு வெளிச்சம் முகவரிதராவிட்டாலும் ..
எழுத்துக்களாக இவ்வுலகில் நானிருப்பேன் ..!
வான வில்லின் தோற்றத்தின் அருமை
பூமிக்கு அப்போது தெரியாது ..
மேக மூட்டமாக சொன்னாலும் ..
புரியாது இந்த மண்ணிற்கு !மழை பொழியும் வரை ..!
தமிழ் அன்னைத் தொட்டிலில்
தமிழ் பாடி தாலாட்ட
நான் உறங்குவேன்
எவ்வித கவலையின்றி ….!
வார்த்தைகளால் சொல்லமுடியாவிட்டாலும்
என் கவியால் ...தொடரும்
ஆதங்கத்தை அதில் படைப்பேன் !
கவிஞனாக வர முடியாவிட்டாலும்..
கவிதையாக உலா வருவேன் .
இருக்கும் வரை மட்டுமல்ல -
இறந்தப்பின்பும் பண்பை விளக்கிடும்
என் எழுத்துக்கள். உயிரோடு .!