> >
Posted on சனி, 15 அக்டோபர், 2011 | No Comments


வெற்றிப்படிகள்.!

ஒவ்வோர்.. முறை..
விழுகையில்..
எழுகிறேனோர்...
விதையாக..!

தோல்வியென்னை
தோற்கடித்தும்.!- துவளவில்லை
எழுச்சியோடு..
விடாமுயர்ச்சி..!

துன்பம்..
துளைத்து...-
இரணமாக்கியபோதும்.
வருந்ததில்லை.!

ஊற்று நீராய்..
அன்னை.!-உயர்த்திட
உரமாகிய,,
தந்தை.!

தூணாய்(வேர்)
மனைவி.!-தாங்கும்
விழுதாய்..
நட்பு.!

வளர்ச்சியில்..
பங்கு..!-சிந்த்திய
சிறுத்துளி
வியர்வை..!

இலட்சியத்தோடு..
கடக்கும்படிகள்.!-தூரத்தை
காண்பித்திடும்
மைல்கல்..!

நெடுப்பயணம்..
எதிர் நோக்கும்
ஊன்றுக்கோலாகும்
இலக்கு.!-


தடைகளை..
தகர்த்திடும்-இலக்கு.!
தன்னம்பிக்கையே..
விடியலின் விடைகள்.!

கடுமையாய்..
போராட..
காத்திருக்கும்
வழித்தலம்.!


துணிவோடு
எதிர்த்தால் மட்டுமே
போர்க்களத்தில்
வெற்றி.!

வலியப்பயணம்
எளிமையாக்கினால்..
வலிமையை
சேர்க்கும்.!

கனக்கும்
வேதனைகளை-
சுகத்தோடு..
ஏற்றிட்டால்..

சுமையாகும்
வேதனைகள்
சுகமாகும்..
வாழ்க்கை.!








Leave a Reply