மொழி !, தனிமை {அ} பிரிவு !
Posted on ஞாயிறு, 10 ஜூன், 2012
|
No Comments
மொழி !
தமிழன் தமிழை
வளர்க்கவில்லை ...
தமிழ்நாட்டில் !
"மொழி" வளர்கிறது !
கூடுவிட்டு கூடுபாய்ந்து
அரபுநாட்டில் !
பாலைவனத்தில்
முளைக்கும் விதைகள் !
தனிமை {அ} பிரிவு !
வீட்டுக்கு வீடாகும்
வாசப்படிகள் !-பிரச்சனையோடு
வரவேற்கும் கதவுகள்
திறக்கும் நீதிமன்றம் !
குற்றம் வரிசையில்
காக்கும் வழக்குகள் !
மரபு மறந்த மனிதன்
பணிவைத் துறந்த பொறுமை !
புரிதளில்லாத வாழ்க்கை
பிரிவினைத் தேடும் நீதி !
பிரிந்து தவிக்கும் அநீதி
தனிமையில் உணரும் தவறு !