அன்றும் இன்றும் என்றும் நினைவுக்கூறும் என் எழுத்து !
Posted on செவ்வாய், 12 ஜூன், 2012
|
No Comments
என்னைப்படைத்த
கடவுளுக்கு முதல் நன்றி !
பெற்றடுத்த தாய்க்கும்
சிரமமெடுத்த தந்தைக்கும்
அரவணைத்த பெரியம்மாவுக்கும்
தோள்தந்த சகோதரர்களுக்கும்
தரமுயர்ந்த சகோதரிக்கும்
ஒழுக்கம் கற்பித்த பள்ளிக்கும்
உறுதுனையாகிருந்த நட்புக்கும்
நினைக்கும் உறவுக்கும்
வந்த காதலுக்கும்!
பிரிந்த காதலிக்கும் !
வளர்ந்த திறமைக்கும்
அறியாமை தோல்விக்கும்
அறைந்த காவலுக்கும்
அவமதித்த தீயவருக்கும் !
அள்ளிக்கொடுத்த கவிதைக்கும்
ஏற்ற வாழ்க்கைக்கும்
தூணாய் இருக்கும் மனைவிக்கும்
ஆனந்தம் தரும் பிள்ளைகளுக்கும்
அருகாமை மாமியாருக்கும்
பிழைக்கும் தொழிலுக்கும்
உழைக்கும் முதலாளிக்கும்
காணும் வாசகருக்கும்
குறைகூறும் ஞானிகளுக்கும் !
நிறைகானும் அறிஞர்களுக்கும்
உதவும் சேவர்களுக்கும் !
சிறக்கும் மாணவர்களுக்கும்
சிந்திக்கும் ஆசிரியர்களுக்கும்
உதவும் கணினிக்கும்
உயிர்த்தியாகம் செய்யும் எழுதுகோலுக்கும் !
சரித்திரம் படிக்கும் எழுத்துக்கும் !
சகித்துக்கொள்ளும் குப்பைக்கும்
ஓடாய் தேயும் செருப்புக்கும் !
மானத்தை மறைக்கும் ஆடைக்கும்!
நிழல்தரும் மரத்திற்கும்
மழையை காக்கும் குடைககும் !
வளங்களாலான பழவகைக்கும்
நிலங்கலாளான தானியத்திற்கும்
என்னை சுமக்கும் பூமிக்கும்
மாய்ந்தால் கொள்ளும் மண்ணுக்கும்
இருக்கும் முதல் இறக்கும் வரை
நினைவிற்கொள்ளும் என் எழுத்து
நான் வாழ்வதை பொருட்டு!
நடத்தை ,அறத்தை, பொருத்து
அகந்தை விட்டு ,ஒற்றுமையோடு
வாழ நினைக்கிறேன் ..!
மறைந்தாலும் விடுத்துசெல்லும்
ஒழுக்கம் நற்பெயரோடு உலாவரவே ஆர்வம்!