> > நபிகள் நாயகம் !

நபிகள் நாயகம் !

Posted on ஞாயிறு, 24 ஜூன், 2012 | 1 Comment


ஒழுக்கம் ஒன்றே உயர்வாகக்கொண்டார் 
பிறர் விழிக்க அதில் தன்னையே விதைத்தார்  !

மறைமொழியறிந்து அறவழி கடந்தார் 
அது இறைவழியென அதன் வழிப் பணிந்தார் !

சொல்லால் ,செயலால் தனித்தே நின்றார் 
வேதனையும் போதனையும் தந்தாலும் நாடியே  சகித்தார் !

சென்ற வழியில் பாதகம் வந்தும் 
கண்டு அஞ்சி பின் விலகிட மறுத்தார் !

சமுதாயம் சிறக்க சமுத்துவத்தை போதித்தார் 
நற்குணத்தாளையே சமுதாயத்தையே பேணிட்டார் !

இறைத் தூதராகி {நபியாகி }ஒருவராகி சாதித்தார் 
மனித நேயத்திற்கு நாயகமாகியே  வாழ்ந்திட்டார் !

கற்பித்தவருக்கு ,கற்றவராவார் உண்மைஆசான் !
நல்லடியனாய் திகழ்ந்திட்ட இவர் !உண்மை இறை நேசான் !

Comments:1