கவிஞர் வைரமுத்து!
Posted on வியாழன், 28 ஜூன், 2012
|
No Comments
வைரமுத்து !
வைரம் பாய்ந்த வரிகள்
முத்தாய் சொலிக்கும் எழுத்துக்கள்
கவிதைக்கு கிடைத்த
வைரமும் ,முத்துவும்
தமிழனுக்கும் ,தமிழ்நாட்டிற்கும்
கிடைத்த ஈடற்ற சொத்து !
வித்தாய் எழுந்த மெட்டு
குரலில் பட்டு மின்சாரமாய்
தாக்கிய பாடல்கள்
இசை சங்கமத்திற்கு
திசைகள் மாற்றிய
விசைப்படகு !
தொடரும் ஏடுகளில்
பதித்த பதிவு -பெருத்த
வைக்கும் தொகுப்புகளால்
ரம்மடித்து போதையேரிடும்
முத்துக் குளியல்
கவிஞர் வைரமுத்து!
இன்றைய கவிப்பிரியர்களின்
நெஞ்சை தைத்த ஊசி !
கனத்த வழியில் எளிமையாய்
பயணிக்க ஆர்வமாய்
வழி வகுத்து செல்கிறது!
படைப்பாளனாக்கி அழகு
பார்க்கிறது எழுத்தாளனாய்
உருவாக்கும் இவனொரு சிற்பி !