> > கவிஞர் வைரமுத்து!

கவிஞர் வைரமுத்து!

Posted on வியாழன், 28 ஜூன், 2012 | No Comments

வைரமுத்து !
வைரம் பாய்ந்த வரிகள் 
முத்தாய் சொலிக்கும் எழுத்துக்கள் 
கவிதைக்கு கிடைத்த
வைரமும் ,முத்துவும் 
தமிழனுக்கும் ,தமிழ்நாட்டிற்கும் 
கிடைத்த ஈடற்ற சொத்து !

வித்தாய் எழுந்த மெட்டு 
குரலில் பட்டு மின்சாரமாய் 
தாக்கிய பாடல்கள் 
இசை சங்கமத்திற்கு 
திசைகள் மாற்றிய 
விசைப்படகு !

தொடரும் ஏடுகளில் 
பதித்த பதிவு -பெருத்த 
வைக்கும் தொகுப்புகளால் 
ரம்மடித்து போதையேரிடும் 
முத்துக் குளியல் 
கவிஞர் வைரமுத்து!

இன்றைய கவிப்பிரியர்களின் 
நெஞ்சை தைத்த ஊசி !
கனத்த வழியில் எளிமையாய் 
பயணிக்க ஆர்வமாய் 
வழி வகுத்து செல்கிறது! 
படைப்பாளனாக்கி அழகு 
பார்க்கிறது எழுத்தாளனாய் 
உருவாக்கும் இவனொரு சிற்பி !

Leave a Reply