புத்தர் !
Posted on வியாழன், 28 ஜூன், 2012
|
No Comments
போதி மரத்தில்
அமர்ந்ததால் ஞானம்
வளர்ந்தது !கற்ற ஞானத்தை
உலகிற்கு தானமாக்கியதால்
புத்தரானது !
பக்தனாக உருவெடுத்த
சித்தர்களுக்கு ஆசான்!
வழியேற்று நடந்தவருக்கு
சித்தர்களுக்கு ஆசான்!
வழியேற்று நடந்தவருக்கு
குருவாகி ..-சொல் வேத
வாக்காய் பிரதிபளித்ததால்
மக்களின் நேசன் !
பாவத்தையும் கருணையையும்
போதிக்கும் பித்தனாகிய கற்றான் !
இறைவனுக்கு துதிப்பதில்
உண்மை பக்தன் !
மூடப்பூட்டை
மூடப்பூட்டை
உடைத்தெரிந்த இவன் ஒற்றன்!
மனித ஞானக்கூட்டை
திறந்திட வைத்த
ஞான சாவி வித்தன் !
ஞான சாவி வித்தன் !
விலங்குகளை கொல்வதேப்
பாவம் கூறி!-
உயிரின் உன்னதத்தை
உணரவைத்த தன்னலமற்ற
மனித நேயன் !
இவன் மீதுப்பற்றினால்
ஆழமாகி பதிந்து மனதில்
மனிதனால் உருவெடுத்தான்
இவனானான் கடவுள் !
சிலையாகி நிலையாகி உலக
வரலாற்றிலே பேரும் புகழும்
சொல்வடிவிலே பதிவாகி
பெருமை சேர்க்கிறது
ஏட்டு வடிவில் !