> > கள்ளக்காதல் !

கள்ளக்காதல் !

Posted on புதன், 18 ஜூலை, 2012 | No Comments



விழியிலே கர்ப்பமுற்று
இதையத்திலே கருவுற்று
மாதங்களாய் சுமந்த
காதல் பிரசவமானது உதட்டில் !

இருக்கையில் ஏளனம் செய்யும்
பேச்சு வசைப்பாடி ,உள்ளத்தால் வாடி
கூடியப்போது பல நேரம் உறவு
அறந்து சுவடாய் ரணத்தோடு பிரிவு !

உண்மையாய் ,நேசமாய் ...அன்பாய் ,பாசமாய் சுவாசமாய் உள்ளே நுழைந்தும் வாசித்தும் ,சுவாசித்தும் இறுதிவரையில் ஏக்கத்தோடு வாடி இறக்கையில் !

உலகம்தூற்றி தூக்கிஎறிய...
திரையிட்டு மறைவற்று வெளிச்சமாய் !
சுதந்திரம் தந்து பறக்கும் பறவையாய்
விடுதலையோடு உலாவர ...!

விழிகள் விழிகள் பேசாமல்
உள்ளம் உள்ளம் பரிமாறாமல் !
உணர்வுகளால் எழுந்த ஆசை
மோகத்தில் சிக்கிக்கொள்ள !

ஏனோ ஆபாசத்திற்கு அவலப்பெயர் தந்திடஉடல்கொண்டுநாடகக்கொள
ளும் அவலத்திற்கு கள்ளக் காதலென்று அவலப்பட்டம் சூட்டியதோ ஏனோ ?!

உண்மையாகிருந்து ,சூழ்நிலையில் பிரிந்து கற்ப்பு நெறியுடன் வாழ்ந்து
காலம் வாழும் வரையில் புனிதமாய்
வாழும் ஆயுள் வரைக்காதல் !

கள்ளர்களுக்கும் ,விபச்சாரிகளுக்கும்
குருடர்களுக்கும் ,குமாரிகளுக்கும்
அவலப்பசியால் ருசியறிய நட்பைக்கொண்டு உறவுக்கே துரோகமிட்டு உடல் கொண்ட காதல் !

எப்படி காதலானதோ ?இவ்வுண்மை அறிந்த அறிஞர்கள் ஏனோ !தவறாய் சூட்டிய பட்டத்திற்கு தானோ !ஏற்க வேண்டும் !புனிதத்திற்கு மதிப்பும் மரியாதையும் சாய்க்க வேண்டும் !

இளமையிலையே மோகம்
எழுப்பும் தேகம் உணர்வாய் தாகம்
எழுப்பியும் அடக்கமிருக்கும் ஒழுக்கம்
காக்கும் நெறியே காதலாகும் பழக்கம் !

கள்வர்களுக்கு திருட்டுத்தனமாய்
விபச்சார வியாபாரத்திற்கு
கொல்லும் உறவு கொள்ளும் மறைவு
உடலும் உடலுமிணைந்து நடனமாடும் !

பிழைகள் வாழ்க்கை சீரடிக்குமே ஒழியே ...!
காதல் சீரழிந்துப்போகாது !பிறர்
ஏற்படுத்தினாலும் பதிந்த கறைகள்
கரையேறும் குப்பை குப்பைத்தொட்டியில் !

வெற்றியாளர்களை உணரவைத்து
திருந்த வைத்து இல்லறம் நல்லறமாக
தொடரும் நட்போ கைக்கொடுக்கும்
வளமான வாழ்க்கைக்கு தனித்து நிற்கும் !

தோல்வியாலர்களுக்கு படிப்பினை வழங்கி ஞானியாக்கி ..குருவாகவும் ஆசானாகவும்வழிநடத்திஅறிஞராக்கி இன்பத்தோடு புன்னகைக்கும் கவிதைகளாக ஆகும் விதைகள் !

வாழ்க்கைக்கு உரமாய் வளர்ச்சியை கொடுக்கும் அறவாழ்க்கை !நெறிவாழ்க்கை உலகமே
கரத்தில் கொண்டு வந்து பிறக்கும்
உணர்வு வாழும் வரைக்கும் உள்ளுக்குள்ளே வாடி நகைக்கும் !

Leave a Reply