> > மழலையாக இருக்க விருப்பம் !

மழலையாக இருக்க விருப்பம் !

Posted on புதன், 18 ஜூலை, 2012 | No Comments

பிறந்தக்குழந்தையாக இல்லாமல் 
தவழும் குழந்தையாகவே 
இருக்க விரும்புகிறேன் !எப்போதும் 
ஏனெனில் அறியா உலகம் புதுமையாக !

பொறாமையறியா ,பொல்லாப்பறியா..
மதங்கலறியா , குலங்களறியா
உண்மையறியா ..நன்மையறியா,
தீமையறியா..ஒழுக்கமறியா...!

விழப்பமறியா ,கொழப்பமறியா
கள்ளக்கபடமற்ற ..உள்ளம் ...
வெள்ளை நீரோடை பார்ப்பவர்களுக்கு
கொள்ளைகொள்ளும் எழில் !

அழவும் ,அடம்பிடக்கவும்
விளையாடவும் ,மனம்போனபோக்கும் !
இனம் ஒன்று ,மனம் ஒன்று !
பாலரே ,,,,தன் வகையென்று !

அடித்தாலும் ,உதைத்தாலும்
மெய்மறந்த குணத்தாலும்
புன்னகைத்தே சேர்ந்துக்கொள்ளும்
நட்பின்றி ,உறவின்றியாகும் ஈர்ப்பு !

மழலை மொழிப்பேசி ..
இசைப்பாடியே அன்புத்
திசைநோக்கியே நடைபபோடும்
துள்ளி ,குதித்து தாய் மடியேறும் !

மானாய் ,மயிலாய்...காண்பவருக்கும்
ஈர்க்கும் !தொட்டுப்பழகவும் எடுத்துக்
கொஞ்சவும் ,நித்த ,நித்தமாய்
வாங்கும் முத்தம் சொந்த உறவினறி..!

தேடலில் புதுமைப்பழக்கம் ...வாடிக்கையாகும் !
கண்டு ரசிப்பவர்களியும் புன்னகைத்து
கை அசைக்கும் !வஞ்சகமுள்ள ...
உலகில் அறியாது சிறுப் பிள்ளையாய் !

உண்மை அன்பே பார்க்கும்
நல்லவர் ,தீயவர் போதித்தாலும்
தடையின்றியாகும்!-அனைவர்
உள்ளத்தில் குடியேறும் வாஞ்சுள்ளம் !

Leave a Reply