பாரதி - யார் ?
Posted on புதன், 18 ஜூலை, 2012
|
No Comments
துன்பத்திலே துவண்ட
துயரத்திலே பிரண்ட
வறுமையிலே வளர்த்த
குலத்தினிலே பிறந்தவர் .
உயிர் நேசத்தினாலே
கொண்ட பாசத்தினாலே
தமிழ் சுவாசித்தினாலே
புரட்சியாய் எழுந்தார் !
வீதிதோரம் மரங்கள்
மரத்தினுள்ளே கிளைகள்
துண்டாய் சிதறுவதைக்கண்டு
அதில் முளைத்த தண்டாய் செழிந்தார் !
தீண்டாமை ,தீயணைக்க
பாட்டினிலே சிறுத்துளிநீர்
கசைய...இதயகுளத்திலே
பாசனை குழாயமைத்தார்
பற்றியநெருப்பினை ...
தன்னெழுத்து ஆக்கத்தாலும்
வீர இசை முழக்கத்தாலும்
பாட்ட்டாலே பரவியத்
தீயை அணைத்தார்..!
அன்னைதேசத்தை அந்நியன்
கூரையமைத்திருப்பதை
கண்டு எழுச்சியாக
எழுந்தவர் பாரத -தீ !-யாக ...!
எதிர் படைப்பாகவும்
வீரநெருப்பாகவும் பற்றிட்டார்
தமிழ்பெருமையினை உயர்த்திட்டார் !-
உலக வரலாற்றிலே பதிந்திட்டார் .!