""அகிம்சை ""!
Posted on திங்கள், 8 அக்டோபர், 2012
|
No Comments
காந்திய தேசமென்று மேவிட
உரைத்து சம நீதி சமயம்
கற்பித்து மனிதன் கூடி வாழ்ந்திட
பல போதனைகள் வழங்கிய
தேச பக்தனின் கடை வழி !
நடையில் அகிம்சையை உண்டு
அழிக்கும் ஆயுதங்களை மெண்டு
உயிர் வாழ கூர்மை புத்தியுற ஞானத்தை
தெளித்து யுக்தியை கண்டிட வகுத்த வழி !
தீ-விரவாதம் கூடாதென நூதன
போராட்டம் சாதாரணமான சாதனமற்ற
சாத்திய அமைதி சாதனைக்கு அறிவிழி
நாகரீகம் உரியது வாழ்வியலுக்கு ஒழுக்கம்!
வழிமுறைகளை நெறியது உயரிது
தேசப்பற்று மதித்தால் ஒற்றுமையை
கற்று கற்பித்து வந்திட்டால் உலகில்
சாந்தியும் சமாதானமும் நிலவும் விழியில் !