> > என்னருமைத்தாய் !

என்னருமைத்தாய் !

Posted on திங்கள், 16 ஜூலை, 2012 | No Comments


மாதங்களாய் சுமந்து 
சுமையோடு நடந்து 
வலிமையை கடந்து 
வளிமையை இழந்து !

எளிமையோடு பெற்றெடுத்த 
எம்மண்ணை நீயோ ..!
நீ கதற கண்ணீரிட்டு 
உலகத்தை கண்டிடவைத்தவளோ !

இளமையை மறந்து 
பருவத்தை துறந்து 
எம்முயிரை நேசித்து 
உம்முயிரையும் துறக்க துணிந்தவோ ?

உயிரோடு ஈன்றெடுத்த 
கருனையுள்ளமே ....
பாசத்தோடு பரிவனை 
செய்யும் நேசத்துரும்பிடமே ..!

ஈன்றெடுத்துபின்  முதன்முதலாய் 
உம்மைக்காணுகையில் ....
வியக்கிறது எம்பார்வை !
தவமெடுதது பெற்றுடத்ததால் 
எம்மகம் காண்கிறது உம்முகம் !
  

Leave a Reply