என்னருமைத்தாய் !
Posted on திங்கள், 16 ஜூலை, 2012
|
No Comments
மாதங்களாய் சுமந்து
சுமையோடு நடந்து
வலிமையை கடந்து
வளிமையை இழந்து !
எளிமையோடு பெற்றெடுத்த
எம்மண்ணை நீயோ ..!
நீ கதற கண்ணீரிட்டு
உலகத்தை கண்டிடவைத்தவளோ !
இளமையை மறந்து
பருவத்தை துறந்து
எம்முயிரை நேசித்து
உம்முயிரையும் துறக்க துணிந்தவோ ?
உயிரோடு ஈன்றெடுத்த
கருனையுள்ளமே ....
பாசத்தோடு பரிவனை
செய்யும் நேசத்துரும்பிடமே ..!
ஈன்றெடுத்துபின் முதன்முதலாய்
உம்மைக்காணுகையில் ....
வியக்கிறது எம்பார்வை !
தவமெடுதது பெற்றுடத்ததால்
எம்மகம் காண்கிறது உம்முகம் !