அம்மா பாடல் வரிகள் !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
செழித்து வளரத்தான் உரமாகிருந்து
உயிரைத்தான் தான் தழைக்கும் !
அமைதிங்கிற வார்த்தைக்கும் ...... {2 முறை }
மூவெழுத்தில் பொருளடங்கும்
கருத்து பிழையின்று
இலக்கணமாகத்தான் தொடுக்கும் !
கற்று உணர்ந்தால் ..................... {2 முறை }ஞானத்தைத்தான் வளர்க்கும் !
பற்றுக்கொண்டால் போதனைக்கு
அறிவுக் கண் திறக்கும் !
சாந்தி சமாதானம் ...
குணத்திலே தானடங்கும்
அறவழி ஒழுக்கத்திற்கு பெயரில்
எடுத்துக்காட்டு நன்னடக்கம் !
பாசத்தால் மழை பொழியும் அன்பு ஈரத்தில் தான் நனையும்
ஓடையில் விழுந்தாலும்
வாழ்த்தும் பண்பாக எழுந்து விழையும்!
வாழ்க்கை பிரகாசிக்க
தேய்ப்பிறையாக வாழ்ந்திருக்கும்
இருளை நீக்கிட்டு
தானே தோய்ந்திருக்கும் !
இச்சீவனில்லை என்றால்
எங்கே உயிர் ஜீவங்கிருக்கும்
உலகம் அறிந்திட
வழிகளேது பிறந்திருக்கும் !
உள்ளத்தால் மகிழ்கொடுக்கும்
துன்பத்தை விரும்பியே சுமக்கும்
இன்பம் தந்திட கனக்கும்
வருத்தத்தைத்தான் மறைக்கும் !
விலை மதிப்பற்ற பரம்பொருளா
நிகரற்றுத்தான் உயிரிருக்கும்
வறுமைக்கு அடுப்பெறிய உடல்
உலையில் எரிந்துப்பசியை தனைத்திருக்கும்!
உதட்டால் ருசித்தால் மொழியில்
தேனாக சுரந்து அதுவாகக் கசியும் நோய் தீர்க்கின்ற நல்ல மருந்தாக சிரித்தாலே செய்யும் வசியம் !