Posted on ஞாயிறு, 9 அக்டோபர், 2011
|
No Comments
ஒருவனே - கடவுள் .!
பெறவுமில்லை ..
பெறப்படவுமில்லை .!
தேவையற்றவன் - எவனோ ..
அவனொருவன் .! -
நிகரற்றவன்.!
உலகில்.!
இழிவு .!
போறாமைக் கொள்வான்
தன்னையேக் கொல்வான்
விழுப்பம்.!- சிறுமை .
துளி நஞ்சாகி
கொல்லும்
இழிவு.!
சினம் .!
தன்னிலை
தடுமாறாத வரையில் ..!
மனிதனாகிருக்கிறான்
மனிதன் .!
எண்ணத்தில்
விளைந்து -அங்கத்தில்
மறைந்து ..
ஒட்டு நோயாக ..!
வெளியேறினால்
சீரழித்து .!- கேடு
விளைத்திடுமோர் ..
கொடிய மிருகம்.!
மனக் குகையில் ..
உணர்வினை
அடக்கினாளது
மௌனம் காக்கும்.!
அடிமை .! -
நாவடிக்கி
பேணும்போது.!
பொறுமைக்காக்கும்.!
நல்லவர்களை
மடையனாக்கும் .!
நற்குணங்களை
பகைமையாக்கும்.!.!
ஞானத்தை
மத்தமாக்கும்.!
சிந்தையை
போதையாக்கும் .!
நாவோடிணைந்து
வளர்க்கும்.! -
வார்த்தைகளே ..
குழப்பம்.!
உதடுகள் .! சுட்டிட
வைக்கும்.!
கக்கும்
தீப்பொறி .!-
நாவு..! தன்னறியாமை
நெருப்பானால் ..
கருகிட வைக்கும்...
நட்பு.!
சினமோர் - கண்ணாடி.!
நழுவி
விழுந்தால்..
உடைந்திடும்.
நட்பு.!-
திரிந்த
"துண்டுகளாய் "...!
பிரித்திடும்
உறவு .!