> >
Posted on ஞாயிறு, 9 அக்டோபர், 2011 | No Comments

ஒருவனே - கடவுள் .! 

பெறவுமில்லை ..
பெறப்படவுமில்லை .!

தேவையற்றவன் - எவனோ  ..
அவனொருவன் .!  -
நிகரற்றவன்.!
உலகில்.! 

இழிவு .!

போறாமைக் கொள்வான் 
தன்னையேக் கொல்வான்
விழுப்பம்.!- சிறுமை .
துளி நஞ்சாகி 
கொல்லும் 
இழிவு.!


சினம் .!

தன்னிலை 
தடுமாறாத வரையில் ..!
மனிதனாகிருக்கிறான் 
மனிதன் .!

எண்ணத்தில் 
விளைந்து -அங்கத்தில் 
மறைந்து ..
ஒட்டு நோயாக ..!

வெளியேறினால் 
சீரழித்து .!- கேடு 
விளைத்திடுமோர் ..
கொடிய மிருகம்.!

மனக் குகையில் ..
 உணர்வினை 
அடக்கினாளது 
மௌனம் காக்கும்.!

அடிமை .! - 
நாவடிக்கி 
பேணும்போது.!
பொறுமைக்காக்கும்.!

நல்லவர்களை
மடையனாக்கும் .!
நற்குணங்களை 
பகைமையாக்கும்.!.!

ஞானத்தை 
மத்தமாக்கும்.! 
சிந்தையை 
போதையாக்கும் .!

நாவோடிணைந்து
வளர்க்கும்.! -
வார்த்தைகளே ..
குழப்பம்.!

உதடுகள் .! சுட்டிட 
வைக்கும்.!
கக்கும்
 தீப்பொறி .!-

நாவு..! தன்னறியாமை
நெருப்பானால் ..
கருகிட வைக்கும்...
நட்பு.! 


சினமோர் - கண்ணாடி.!

நழுவி 
விழுந்தால்..
உடைந்திடும்.
நட்பு.!-
திரிந்த 
"துண்டுகளாய் "...!
பிரித்திடும்
 உறவு .!
    




Leave a Reply