ஏழை வயோதிகரின் குமுறல் !
Posted on வெள்ளி, 8 ஜூன், 2012
|
No Comments

முதுமையை சுமக்கும்
வறுமை அல்லாடுகிறது !
"இருள்"மூழ்கடித்த
குடிசையில் எழிலாய்
மின்னுகிறது நட்சத்திரம்!
அடுப்பேறிய "பசி "
எரிகிறது குடல்!
தகுதியற்ற உடலால்
பிழைக்கத் தெரியும் !
உழைக்க முடியாது !
பிறர் வீட்டில்
ஏற்ற வேண்டிய
குத்து விளக்கு
குத்தகைக்கு போகாத
விளக்குகளாய் பாழடைந்து
மூலையில் கெடக்கிறது!
முதிர் கன்னியாகிய
கண்ணிகள் !நற்திரு-
மனத்தை தேடுகிறது!
தரம்பார்க்கும் வரன்
தரத்தை நோக்குகிறது
திரு-மணங்கள் !
ரூபாய் கூடினால்
தட்டுகள் மாறும்
நோட்டினாலாகும் அர்ச்சனை !
உறக்கத்தை துறக்கும்
விழிகள்-வலிய
வேதனையோடு கவலை !
இன்று -நாளை
மரண நாட்களுக்காக
காத்திருக்கும் புதைக்குழி !
தொண்டைக்
குழியடைத்து
உயிர் பிரியும் முன்... !
இறுதியாசை ...கனக்கிறது
கற்பனையோடு தவிக்கிறது
வெறுக்கும் மரணம் !
கண்ணை காத்த
இமை !-மூட
மறுக்கிறது விழிகள் !
திருடர்கள் கிடைக்காவிட்டாலும் !
குருடர்களாவது கிடைக்கமாட்டாரா ?
தேடும் பார்வை !
நம்பிக்கையோடு கடக்கும்
வாழ்க்கை உலர்ந்து
வாடும் குடும்பம் !
தேடலோடு ...முதியவர் !