> > உயந்தது நற்மனித நேயமே...!

உயந்தது நற்மனித நேயமே...!

Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012 | No Comments


உயந்தது நற்மனித நேயமே...!

சம்பிரதாயம் வேண்டாம்!
வீண் சஞ்சலங்கள் வேண்டாம்!
சமுத்துவம் பிறக்க ....
தேவை சகோதரத்துவம்.!

விவாதங்கள் வேண்டாம்!
வீண் வினையங்கள் வேண்டாம்!
நற்கருமங்கள் செய்திட.....
தேவையானது நல்லதோர் மனமே...!

உதவிட நினைப்போர்க்கு...
சிரம்பணிந்து வரவேற்போம்.!
வறுமைதனை அகற்றுவோர்க்கு...
கைகோர்த்து பலம் சேர்ப்போம்.!

அறியாமைகளை விரட்டு வோர்க்கு  
ஊக்கத்தை அளித்திடுவோம்...!
தீண்டாமையை கொளுத்துவோர்க்கு...
"தீ" யாக நாமிருப்போம்...!

மதம் மனிதனை வாழவைக்காது!
இறக்க குணமொன்றிருந்தால்...
விழுப்பம் மதத்தை ஆதரிக்காது...!
உயர்ந்தது நற்மனித நேயமே....!

கவிஞர் . முபாரக்.


Leave a Reply